Monday 6 December 2021

தீராத கடன் தீர எளிமையான பரிகாரம்.

💐எளிமையான "கல்உப்பு" பரிகாரம்..!💐

🌹உங்கள் தீராத பொருளாதார  பிரச்சனைகளும்.., உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும் எளிதில் தீர உப்பில் மிளகை இப்படி செய்தால் போதுமே..!

🌹ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கும். அந்த பிரச்சனைகளுக்கான தீர்வை எதிர்நோக்கி இறை வழிபாடுகளில் ஈடுபடுவது உண்டு. எந்த பிரச்சனைகளுக்கு எந்த பரிகாரத்தை செய்தால் உடனே நிவர்த்தி அடையும் எனும் சூட்சமத்தை அறிந்து கொண்டிருந்தால் நிச்சயம் அந்த பிரச்சினைகளிலிருந்து விரைவாக விடுபட முடியும். இப்படி நம் வாழ்க்கையில் இருக்கும் பணப் பிரச்சனைகளுக்கும், தீராத உடல் ஆரோக்கியம் சம்மந்தமான  பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய அற்புத பரிகாரம் தான் இந்த உப்பு பரிகாரம். அதை எப்படி முறையாக செய்ய வேண்டும்? அதனால் கிடைக்கும் பயன்கள் என்ன எனும் சூட்சமத்தை அறிந்து கொள்ளுங்கள்.

🌹கல் உப்பு என்பது பாற்கடலில் இருந்து எடுக்கப்படுவதால் மகாலட்சுமிக்கு இணையாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. பாற்கடலில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் பாதம்பட்ட இந்த கல் உப்பு வீட்டில் இருந்தாலே அந்த வீடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். அதனால் தான் நம் முன்னோர்கள் எல்லாம் சாதாரண உப்பை விட கல் உப்புக்கு அதிக மகத்துவம் கொடுத்து பயன்படுத்தி வந்தார்கள். நாமும் கல் உப்பினை பயன்படுத்தி ஆரோக்கியத்தையும், இறை சக்தியையும் வீட்டில் காத்துக்கொள்வது அவசியம்.

🌹ஆன்மிகம் மட்டுமல்ல, அறிவியல் ரீதியாகவும் தூள் உப்பை தவிர்த்து விட்டு கல் உப்பை இன்றே பயன்படுத்த துவங்குங்கள். கல் உப்பை வெள்ளிக் கிழமைகளில் வாங்குவது சகல, சவுபாக்கியங்களையும் பெருக செய்யும் என்பது நம்பிக்கை. இந்த கல் உப்பை எப்போதும் பீங்கான் ஜாடியில் தான் போட்டு வைக்க வேண்டும்.  அதில் ஐந்து ரூபாய் நாணயங்களை சேர்த்து போட்டு வைப்பது அவசியம். இது மென்மேலும் நம்மிடம் இருக்கும் பணம் பெருகுவதற்கு வழிவகுக்கும்.

🌹அதே போல உங்களுடைய பூஜை அறையில் கொஞ்சமாக ஒரு பித்தளை அல்லது செம்பு கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் நான்கைந்து மிளகுகளைப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். கல் உப்பு, மிளகுடன் சேரும் பொழுது நம் பிரச்சனைகளும் விரைவாக தீரும் என்பது நம்பிக்கை. இதன் மூலம் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் கண்டிப்பாக தீரும். வெள்ளிக்கிழமையில் இதை செய்து வைத்தால் அடுத்த வெள்ளிக்கிழமையில் கொண்டு போய் தண்ணீரில் கரைத்து ஊற்றி விட வேண்டும். அதுவரை உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் இதனை வைத்திருப்பது அவசியம்.

🌹எப்போதும் பூஜை அறையில் உங்களுக்கு மந்திரம் உச்சரிக்க தெரிந்தால் உச்சரியுங்கள் அல்லது ஒலி வடிவமாக மந்திரங்களை கேட்குமாறு பூஜை அறையை அமைத்துக் கொள்ளுங்கள். பூஜை செய்யும் பொழுது மட்டுமாவது மந்திரங்களை ஒலிக்க விடுங்கள். கோவிலில் ஒலிக்கும் மந்திரங்களின் அதிர்வலை நம் எண்ணங்கள் நேர்மறையாக பிரதிபலிக்கின்றன. அதனால் தான் கோவிலுக்கு செல்லும் பொழுது மனதில் அமைதி பிறக்கிறது. அதே போல நம் வீட்டிலும் மந்திரங்கள் ஒலிக்க நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களும், வீட்டில் இருக்கும் தீய சக்திகளும் நம்மை விட்டு விலகி நேர்மறையான சிந்தனைகள் பெருக்கும்.

🌹இதனால் தன்னம்பிக்கை அதிகரித்து, எதையும் நம்மால் சாதிக்கும் வல்லமை பிறக்கும். இறை சக்தி என்பது மந்திரங்களின் மூலம் நமக்கு எளிதாக கிடைக்கும். இந்த கல் உப்பு பரிகாரத்தை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வர நம்மிடம் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நம்மை விட்டு விலகி ஓடிவிடும். வெள்ளிக்கிழமையில் ஆரம்பித்து மறு வெள்ளிக்கிழமையில் அதனை முடித்து வைக்க வேண்டும். இதே போல தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வர வேண்டும். மிக மிக எளிமையாக இருக்கும் இந்த பரிகாரத்தை அனைவரும் முயற்சி செய்து பார்த்து பயன் பெறுங்கள்.

( இது அனைவருக்குமான பரிகார முறை ஆகும். அவரவர் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண ஊங்களின் தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வுசெய்து அதற்கேற்றபடியான பரிகார முறைகளை பின்பற்றி தீர்வு பெறலாம்)

               🌹சுபமஸ்து🌹

Tuesday 12 October 2021

இந்த பதிவை படியுங்கள் உங்கள் வாழ்க்கை மாறும்.

எனக்கு பிடித்த பதிவு!

✍🏻ஈர்ப்பு விதி என்பது ஒரு இரகசியம் ✍🏻ஈர்ப்பு விதி என்பது ஒரு காந்தநிலை ✍🏻எண்ணங்கள் பொருட்களாக பரிமாணிக்கும்
✍🏻நாம் போகும் இடத்தை சரியான நேரத்தில் சென்று அடைவதே ஈர்ப்பு விதி
✍🏻மன உளைச்சலுக்கு ஆளான ஒரு மனிதன் ஈர்ப்பு விதியை அவன் வெற்றிக்கான படிகளை தீர்மானித்து வாழ்க்கையின் ஈர்ப்பு விதியை நோக்கி அவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.

✍🏻ஈர்ப்பு விதியை கவர்ந்து இழுக்கும் விஷயங்கள் மக்கள் ,வேலை ,சந்தர்ப்பம் ,மன ஆரோக்கியம் ,செல்வாக்கு ,கடன் ,சந்தோஷம், சோகம் ,மற்றும் பொருள்கள் இது எல்லாமே ஈர்ப்புவிதி கவர்ந்திழுக்கும் விஷயங்கள்...

✍🏻உங்களின் மூளையை ஆராய்ந்து வெற்றி அடையுங்கள்

✍🏻உங்கள் எண்ணம் எதுவாக இருக்கின்றதோ ?அதுவாகவே நடக்கும்.

✍🏻உங்களில் மின்சார சக்தி என்பது ஒன்று இருக்கின்றது .இந்த மின்சார சக்தி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இருக்கின்றது ,எடுத்துக்காட்டாக ஒரு நெருப்பில் நீங்கள் சமைக்க முடியும் அதே நேரத்தில் இறக்கவும் முடியும்.

✍🏻இப்பொழுது உங்களுக்கு தேவையான சக்தி நேர்மறையாக சிந்திக்க தொடங்குவது ,நேர்மறை எண்ணங்களாக தொடங்க வேண்டும்.

✍🏻நம் எண்ணங்கள் யாவும் உடனே கைகூட வேண்டும் என்பது அவசியமில்லை அதற்கு சில கால இடைவெளியும் வேண்டும் ,அதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவது நல்லது.

✍🏻நீங்கள் செதுக்கும் நுணுக்கத்தை கற்றுக்கொள்ளவேண்டும்

✍🏻வாழ்க்கையில் நாம் ஈர்க்கின்ற விஷயத்தை விட ஈர்க்காத சில விஷயங்கள் நம்மை சீக்கிரம் வந்து அடையும்.அதாவது ,விபத்துக்கள் ,திடீரென வேலைகள் ,உடல்நிலை பற்றாக்குறையை இதுபோன்ற சில ஈர்க்காத விஷயங்கள் நமக்குள் நடக்கும் அதை உடைத்தெறிந்து நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி நேர்மறையாக இலக்குகளை அடைய வேண்டும்.

✍🏻ஒரு நாளைக்கு நம் மனதில் 60000 எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது

✍🏻எண்ணங்களை கவனிக்க வேண்டும். உணர்வுகள் மூலம் நம் எண்ணங்கள் காட்டிக்கொள்ளும்.அதாவது உங்களின் உணர்வுகள் அன்பாகவும் ,சந்தோசமாகவும் ,பரவசமாகவும் இருந்தால் நன்மையின் அறிகுறியே நல்லதே நடக்கும்.அதுவே உங்கள் உணர்வுகள் அன்பில்லாதவர்களாய், சந்தோசம் இல்லாதவர்களாய் ,கோபம் உடையவராய் இருந்தால் தீமையின் அறிகுறி நல்லது நடப்பது வாய்ப்புகள் குறைவு.

✍🏻நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்றால் உங்களால் உங்களின் வளர்ச்சியை பார்க்க முடியும்.

✍🏻உங்களுடைய உணர்வுகள் தான் உங்களுடைய எதிர்காலம்

✍🏻உங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் எதிர்காலத்தை உருவாக்கும்.
ஏன் எண்ணங்கள் தெளிவாக நேர்மறையாக இருந்தால் பிரபஞ்சத்தைக் கூட அடைய முடியும். சந்தோசமான மன நிலையை பார்க்க முடியும்.

✍🏻சந்தோசமான மன நிலையை குழந்தைகளுடன் விளையாடும் பொழுதும் ,செல்லப்பிராணிகள் உடன் விளையாடும் போதும் உணர்வீர்கள்.

📖இரகசியத்தை எப்படி கையாளுவது?

✍🏻     🪔 🤫 🧞‍♂️

✍🏻எல்லோரும் அலாவுதீன் கதையை அறிந்திருப்பீர்கள் அதாவது அந்த அலாவுதீனின் விளக்கை தேய்த்தவுடன் அதிலிருந்து ஒரு பூதம் வெளிவரும்.அது வெளிவந்தவுடன் “உங்களோடு விருப்பம் தான் எனக்கு கட்டளை”என்று கூறும்.
அதுபோல உங்கள் மனதிடம் கேளுங்கள் உங்களுடைய விருப்பம் என்னவென்று அதுவே கட்டளையாக எடுத்துக்கொண்டு நீங்கள் வாழ்க்கையில் முன்னேற தொடங்குங்கள்..

✍🏻என்ன புரியவில்லையா??

✍🏻நீங்கள்தான் அந்த பூதம் ,உங்கள் மனம்தான் விளக்கு ,உங்கள் மூளைதான் அலாவுதீன்.

இரகசியத்தை உருவாக்கும் செயல்முறைகள்?

✍🏻உங்களுக்கு என்ன வேண்டும் என்று தீர்மானியுங்கள் ,
                 முதலில் கேளுங்கள் அதை நம்புங்கள்             அதை பெற்றதாய் உணருங்கள். 

✍🏻எதை எதையெல்லாம் நீங்கள்  விரும்புகிறீர்களோ அந்த விருப்பமே உங்களை ஈர்க்கும்.

✍🏻நாம் இரவில் காரை ஓட்டும் பொழுது அதன் வெளிச்சம் அடுத்த 100 அடிகளுக்கும் மட்டுமே தெரியும் ,ஆனால் நாம் அடையும் இடத்திற்கு வெளிச்சம் இருக்கும் இடமே தெரியவில்லை.
நாம் நகரும் ஒவ்வொரு அடிகளும் அடுத்த வழிகளை உருவாக்கித் தருகிறது என்பது நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு அவசியம்.
வாழ்க்கையிலும் அப்படித்தான் நீங்கள் எடுத்து வைக்கும் அடுத்தடுத்த படிகளில் எதிர்காலத்தின் வெளிச்சத்தை அடைய முடியும்.

✍🏻நான் முளைப்பதற்கு 
        நீ என்னோடு விதைகளை விதைத்தால் மட்டும்      நான் முளைப்பேன் 
           என்று எண்ணிவிடாதே நீ எந்த விதைகள் விதைத்தாலும் நான் முளைப்பேன் .....
                                            புல்

சக்திவாய்ந்த செயல்முறைகள்:

✍🏻நம் எண்ணங்களின் வெளிப்பாடே நம் இன்றைய நிலை.

✍🏻 நன்றி உணர்தல்
காலை முதல் இரவு வரை உனக்கு என்னென்ன    கிடைத்ததோ, அடைந்தாயோ அதற்கெல்லாம் முதலில் நன்றி தெரிவியுங்கள்.

✍🏻நன்றி உணர்தல் இரண்டு கல்லின் கதை,

ஒரு சிலை செதுக்கும் கலைஞன் அந்த இரண்டு கல்லிடம் ,நான் உங்களை சிலையாக மாற்றுகிறேன் என்று அதற்கு சில வலியும் நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் அப்படி நீங்கள் பொறுத்துக் கொண்டால் உங்களை நான் சிலையாக மாற்றி விடுவேன் என்று கேட்டான்.
அதில் ஒரு கல் என்னது வலிக்குமா ? என்னால் முடியாது என்னால் வலியெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டது.
ஆனால் அந்த இரண்டாவது கல்லோ சற்று யோசித்து வலிதானே நான் பொறுத்துக் கொள்கிறேன்.ஏனென்றால் நான் சிலையாக மாறி போகிறேன் அல்லவா! அதற்காகவே நான் இந்த வலியெல்லாம் பொறுத்துக் கொள்கிறேன் என்னை நீங்கள் செதுக்குங்கள் என்று கூறியது.
அந்தக் கலைஞன் அந்த இரண்டாவது கல்லை நன்றாக செதுக்கி ஒரு கடவுள் உருவமாக மாற்றினான், அதை ஒரு கோவிலில் வைத்து பூஜை செய்கிறார்கள் .பூஜை செய்து கொண்டிருக்கும் போது தேங்காய் உடைப்பதற்காக கலை தேடுகிறார்கள் கிடைத்ததோ அந்த முதல் கல் தான்....ஒருவர் உங்களை நன்றியோடு வெற்றி வழிக்கே அழைக்கிறார் என்றால் அந்த வலியையும் பொருத்து வெற்றியை அடைய முயற்சிக்க வேண்டும்....

✍🏻கற்பனை செய்:
உங்கள் இலக்குகளை அடைந்ததாக கற்பனை செய்யுங்கள் அதை உருவகப்படுத்திப் பாருங்கள் அதில் உங்கள் முன் தோன்றும்.

இதைப் படித்துவிட்டு ஒரு நிமிடம் கண்ணை மூடவும்  ,எடுத்துக்காட்டாக நீங்கள் ஒலிம்பிக்கில் ஓடுவதாக எண்ணிக்கொள்ளுங்கள் ,ஒரு காரை ஓட்டுவதாக எண்ணிக் கொள்ளுங்கள் ,நீங்கள் சந்தோசமாக மிகச் சந்தோசமாக இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்..அத்தனையும் அத்தனையும் உங்கள் முன்னே தோன்றும் அதை நீங்கள் உணர்வீர்கள்.

✍🏻என்னால் மட்டுமே சொல்ல முடியாது.
✍🏻நீங்கள் மட்டுமே உணர வேண்டும்.
✍🏻உங்களிடம் மட்டுமே உள்ளது.

✍🏻அடிக்கடி அலாவுதீனின் விளக்கை பயன்படுத்துங்கள் அதாவது மனதிடம் கேளுங்கள் பூதமாய் இறங்கி உழையுங்கள்,  உங்களின் சக்திவாய்ந்த எண்ணங்களை அப்படியே கற்பனை செய்து பார்த்துக் கொண்டே இருங்கள் அதுவே உங்களின் வசீகரங்களின் முன்னோட்டம்..

பணத்திற்கான இரகசியம்::

✍🏻 மனிதனின் மனதால் எதை உருவாக்க முடிகிறதோ, அதை அடைய முடியும்.

✍🏻உன்னால் இருக்கும் பணத்தை வைத்து இப்பொழுது சந்தோசமாக இருக்க முடியவில்லை என்றால் உன்னிடம் அதிக பணம் இருக்கும் நேரத்தில் உன்னால் சந்தோசமாக இருக்க முடியாது..

✍🏻உன்னுடைய வருமானம் 10000 என்றால் 20,000 ஆக மாற்ற முடியும் ஏன் 500000 கூட மாற்ற முடியும் அதுதான் இரகசியம்.

✍🏻உங்களின் வேலை ஊக்கமளிக்க கூடிய ஒரு சிந்தனை வைத்துக்கொண்டு, அதனை நம்புதல் வேண்டும் ,அதன்படி நடத்தல் வேண்டும்.உங்களின் சிந்தனை பணமாக வைத்துக் கொண்டால் அது கிடைக்கும் என்று நம்புதல் வேண்டும் ,அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

✍🏻அகத்தில் சந்தோசமாகவும் அமைதியாகவும் இருந்து நோக்கம் சரியாக நல்வழியில் இருந்தால் ,புறத்தில் புற அமைதியும் சந்தோஷத்தையும் நீங்கள் பெற முடியும் ஏன் பணம் உங்களைத் தேடி வந்தடையும்..

✍🏻சில சோம்பேறிகள் இருக்கிறார்கள் எனக்கு பணமே தேவையில்லை !எனக்கு பணமே பிடிக்காது! ஆனால் அவர்கள் கூறுவதற்கான காரணம் அவர்கள்  முயற்சிக்காமல் இருப்பது தான்.

✍🏻கடமைக்காக செய்யாதே உன் கடமைக்காக செய்.

உறவுக்கான ரகசியம்::

✍🏻ஒரு குட்டிக்கதை ஒரு இயக்குனர் அவரது மனதை அறிந்து புரியாமலேயே வாராவாரம் ஏன் தினமும் ஒவ்வொரு பெண்களிடம் தவறான உறவு வைத்துக் கொண்டிருந்தார். அவரின் வீட்டின் அறையில் பல்வேறு புகைப்படங்கள் பெண்களின் உருவப்படங்கள், ஒருநாள் இயக்குனருடன் நண்பர் உனக்கு என்ன தேவை இந்த பெண்களிடமிருந்து என்று கேட்டார்?? அந்த இயக்குனருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை அவரது விருப்பம் அவருக்கே புரியவில்லை.. சிறிது நிமிடம் கழித்து எனக்கு வாரத்தில் மூன்று நாள் மூன்று பெண்ணிடம் இருந்தால் போதும் என்று கூறினார்..
அதற்கு அவர் நண்பர் சுவற்றில் உள்ள 3 புகைப்படத்தை தவிர மீதி புகைப்படத்தை கழட்டி தூக்கி எறிய என்று கூறினார். 
படிப்படியாக அவரின் விருப்பம் என்ன என்று அவருக்கு தெரியவருகிறது.
அந்த மூன்று புகைப்படத்தில் இரண்டு புகைப்படத்தையும் தூக்கி எறிந்துவிட்டு ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்திருந்தான் அந்த புகைப்படம் தான் அவருடைய மனைவி அவர் மனைவிதான் .. மனைவி குழந்தை இதுதான் உண்மையான வாழ்க்கை என்று அவருடைய விருப்பம் அவர் மனதில் தெரியப்படுத்தியது.

✍🏻ஒருவரது விருப்பம் தெரியாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்றால் ,அவருடைய பழக்க வழக்கங்களும் அவருடைய சூழ்நிலைகளும் தான் ,எப்பொழுதும் தன்னுடைய விருப்பம் தெளிவாக அறிய வேண்டும் ! மற்றும் நம்மை சுற்றி உறவினர் நண்பர்களிடம் விருப்பம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் . 

✍🏻முதலில் தன்னைத் தானே நீங்கள் பாராட்டி கொள்ள வேண்டும்.

✍🏻 தன்னைத்தானே இரசிக்க வேண்டும் இந்த இடத்தில் அழகைப்பற்றி இரசனை இல்லை நமக்கான ஓர் சுயமரியாதையும் நம்மை நேசித்தலும் அதன்பிறகு எல்லோரையும் நேசிக்கும் எண்ணம் இருத்தல் வேண்டும்.

✍🏻நீங்கள் உறவுக்கான இரகசியத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் குறை சொல்வதை நிறுத்த வேண்டும் உங்கள் குறையை போக்க என்ன வழியோ அவ்வழியே செய்திட வேண்டும்.

✍🏻உங்கள் உறவில் குறை சொல்வதை நிறுத்திவிட்டு அவர்கரளுடைய நிறை சொல்லுங்கள். நிறையை சொல்வதில் கவனம் செலுத்துங்கள்.

✍🏻மன்னிக்கும் குணம் தான் உறவின் இரகசியமே அடங்கியுள்ளது.

ஆரோக்கியத்திற்கான ரகசியம்::

✍🏻 நம் உடல் நம் எண்ணங்களால் உருவானது.

✍🏻 சாதாரண நோய்க்கு மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியம் இல்லை .சாகும் நிலை நோய்க்கு மாத்திரை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்திற்கான இரகசியம். 

✍🏻திறந்த மனது பிரபஞ்சத்தை அளிக்கும். ஆரோக்கியம் ,நிம்மதி ,இயற்கையோடு வாழ வேண்டும் எதிர்மறை வலிகள் இருக்கவே கூடாது. 

✍🏻மன இறுக்கத்தை தூக்கி எறி.

✍🏻 ஏற்றத்தாழ்வு அறிகுறிகளை வைத்து பயப்படவேண்டாம்.

✍🏻 உங்களுக்கு ஏதாவது ஒரு நோய் வந்தால் கூட அதைப் பார்த்து பயப்படுவது முதலில் தவிருங்கள்!அது குணம் அடைந்ததாய் நீங்கள் உணருங்கள் !,அதில் நிஜமாகவே உங்கள் வாழ்க்கையில் குணமடைந்து நீங்கள் ஆரோக்கியத்திற்கான வாழ்க்கையை வாழ்வீர்கள்.

✍🏻 ஆயிரம் மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத உங்களுடைய நோய் உங்கள் மனதால் குணப்படுத்த முடியும்.

✍🏻எவர் ஒருவர் சந்தோசமாக இருக்கின்றாரோ அவர் ஆரோக்கியமாக வாழ்கிறார் ,அதே ஒருவர் சோகமாக இருந்தால் அவர் ஆரோக்கியமாக இல்லை என்றுதான் அர்த்தம்.

✍🏻ஆரோக்கியத்திற்கான இரகசியம் உங்கள் மனதின் சந்தோசம் மட்டுமே.

உலகத்திற்கான ரகசியம்::

✍🏻 உலகத்திற்கான இரகசியம், தேவைக்கான கவனம் செலுத்தினால் போதும் தேவையில்லாத்தற்கு கவனம் செலுத்த தேவையில்லை. 

✍🏻நாம் பொதுவாக சமூகத்திற்காகவும் ஒரு நோய்க்கும் ,ஏழ்மைக்காகவும் ,போதைப்பொருள் தடுப்பதற்காகவும் வன்முறையை தட்டிக் கேட்பதற்கும் ,நாம் இந்த சமுதாயத்தில் எதிர்கொள்கிறோம் ஒரு போராட்டம் செய்கிறோம். 

✍🏻 எந்த ஒரு செயலிலும் நம் சக்திக்கு ஒரு எதிர் சக்தியும் உண்டு என்பதை உணர வேண்டும்.

✍🏻அன்பின் அடையாளம் அன்னை தெரசா, அமைதியின் அடையாளம் காந்தி. அதுபோன்ற உனக்கான அடையாளத்தை உருவாக்கு.

✍🏻 கவனம் போகின்ற இடம் எல்லாம் உன் சக்தி பாயும்.

✍🏻நான் உலகத்தை மாற்ற வேண்டும் நான் மக்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டும் அது உன்னுடைய வேலை இல்லை.உன்னுடைய வேலை இந்த பிரபஞ்சத்தை கையாழுவதுதான் 

✍🏻 இந்த உலகத்தில் எல்லோர்க்கும் ஒரே விதமான தேவைகள் இருப்பதில்லை...!

✍🏻 உன் தேவை என்னவென்று தீர்மானி, தேவைக்கான முயற்ச்சியை தொடர்ச்சியாக செய் உலகம் உன் வசப்படும் ....!!!

உங்களுக்கான இரகசியம்::

✍🏻 உங்கள் கைகளை உற்றுப்பாருங்கள் உங்கள் கையில் சக்தி மிகுந்ததாக உணர்வீர்கள், ஆனால் அது உண்மை அல்ல உங்கள் கைகள் ஆற்றலால் அதிர்ந்து கொண்டிருக்கும்.

✍🏻 எல்லாமே ஆற்றல் என்ன புரியவில்லையா ???முதலில் 
பிரபஞ்சம் 
    பால்வழி அண்டம் 
           மனிதன் 
                உடல் உறுப்பு 
                         உயிரணு  
                                   அணு மூலக்கூறு 
                                               ஆற்றல்

✍🏻நீங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் உங்கள் மனம் பலவீனமாக இருந்தால் உங்களால் அந்த சக்தியைப் பெற முடியாது. இந்தப் பிரபஞ்சத்தையும் அடைய முடியாது.

✍🏻 உன்னுடைய ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. 

✍🏻சக்தியின் பாரம்பரிய நீ 
          கடவுளின் பிம்பமே உன் படைப்பு 
                 கடவுள் நீதான் 
  பிரபஞ்சமே நம் உணர்வுகளின் வெளிப்பாடு...!!!

✍🏻உன்னுடைய தற்போதைய நிலை உனக்கான தகுதிக்கு ஏற்ற நிலை

✍🏻எல்லாமே நாமே .!

* நல்ல எண்ணத்தை உருவாக்கு,
* நல்ல உணர்வுகளை உருவாக்கு,
* நல்ல ஈர்ப்பு விதியை உருவாக்கு ,
* இளமையிலேயே வெற்றிபெறலாம்.

✍🏻 மனசாட்சி இருக்கும்போது மற்ற சாட்சிகள் வேண்டாம். மனமறிந்து செய்யும் செயலுக்கு மனமே நீதியாகும். 

✍🏻பாரம்பரிய பழக்கம் சமுதாய நடைமுறை கலாச்சாரத்தை இவற்றைத் தூக்கி எறிந்து, நாம் எல்லோரும் ஒன்று தான் என்று உணருங்கள்.

✍🏻 முடியும் ,முடியாது இது இரண்டுமே சரி!!

வாழ்க்கைக்கான இரகசியம்::

✍🏻உங்களின் நோக்கமும் திட்டமும் சரியாக இருக்க வேண்டும். 

✍🏻கண்ணதாசன் எழுதியது ,

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ,
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று

அதுபோல நம் வாழ்க்கையில் எவனோ நம் விதியை கரும்பலகையில் ஏதாவது எழுதி வைத்து விடுவான் ஆனால் அதை அழித்து உன் விதியை மாற்று .

✍🏻உன் வாழ்க்கைக்கான இரகசியம் மூன்றே மூன்று விஷயம் 
* ஒன்று மகிழ்ச்சி இருத்தல்
* இரண்டாவது அன்பாக பழகுதல்
* மூன்றாவது சுதந்திரமாய் உணர்தல்

✍🏻 உனக்கு பிடித்ததை எந்த ஒரு தயக்கமில்லாமல் செய்யப் பழகு.

✍🏻மற்றவர்களுக்காக நீ நடிக்காதே, உன்னுடைய வாழ்க்கையை நீ வாழ்.

✍🏻முடிவு சரியாக எடுங்கள்.

✍🏻 பேரானந்தம் அடையுங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் கதவைத் திறந்து நல்லதை தேடுங்கள் உங்கள் ரகசிய அத்தனையும் வாழ்க்கையில் பயன்படுத்துங்கள் உங்கள் சிந்தனை நல்லதாகவே இருக்கட்டும் சிந்தனை நல்லதையே நினையுங்கள் ,  நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே மாறுவாய்!!!!

✍🏻 வாழ்க்கையின் இரகசியம் தெரிந்தும் ,அதை வாழ்க்கையில் பயன்படுத்தவில்லை என்றால் அவன் தான் மிகப் பெரிய முட்டாள். 

* உங்களுக்குத் தெரிந்தால்
* நீங்கள் பயன்படுத்தாவிட்டால்
* நீங்கள் முட்டாள்

       வாழ்க வளமுடன்.

நன்றி:-இரகசியம்

Thursday 9 July 2020

கறிவேப்பிலையின் ஆன்மிக ரகசியம்

🌿 #கறிவேப்பிலை இல்லாத #பிரசாதம்.

நாம் 🌿 கறிவேப்பிலையை சர்வ சாதாரணமாக சாப்பாட்டிலிருந்து எடுத்து தனியே வைத்து விடுகிறோம். ஆனால் இந்த கறிவேப்பிலைதான் ஏழுமலையானையும், பத்மாவதி தாயாரையும் தனித்தனியாக திருமலையிலும், திருச்சானூரிலும் பிரித்து வைத்துள்ளது என்று சொன்னால் நம்ப முடியவில்லை அல்லவா?

ஆகாச ராஜன் தன் மகளான #பத்மாவதி தாயாரை ஏழுமலையானுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்த திருமண நிகழ்ச்சி சித்தூர் மாவட்டம் #நாராயணவனத்தில் முக்கோடி தேவர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் #திருமாலும் #பத்மாவதி தாயாரும் #திருமலை நோக்கிச் சென்றனர். அங்கு #ஸ்ரீனிவாச #மங்காபுரம் என்னும் ஊரில் #கல்யாண #வெங்கடேஸ்வர #பெருமாள் சிறிது காலம் தங்கினார்.

இந்த நிலையில் பத்மாவதி தாயார் தனது தாய் வீட்டு சீதனத்தில் உலகில் உள்ள அனைத்து பொருட்களும் பெருமாளுக்கு கொடுத்து உள்ளதாகவும், ஏதேனும் குறைகள் இருந்தால் கூறும்படியாகவும் திருமாலிடம் வேண்டினார். இதற்கு திருமால் #கறிவேப்பிலை தவிர அனைத்து பொருட்களும் சீதனமாக வந்திருப்பதாகக் கூறினார்.

இதனால் பத்மாவதி தனது தாய் வீட்டிற்கு சென்று 🌿 கறிவேப்பிலை எடுத்து வருவதாக திருமாலிடம் தெரிவித்தார். அதற்கு திருமால் சூரிய உதயத்திற்கு முன் திரும்பி வருமாறும் இல்லையேல் தான் தனியாக திருமலை சென்று விடுவதாகவும் கூறினார்.

தாய் வீட்டிற்குச் சென்ற பத்மாவதித்தாயார் கருவேப்பிலை எடுத்து வருமுன் சூரிய உதயம் தொடங்கிவிட்டது.

#சூரிய #உதயத்தைக் கண்ட #பத்மாவதி #தாயார் #திருச்சானூர் அருகே தனியேநின்று விட்டார். பத்மாவதி சூரிய உதயத்திற்குள் வராததால் #ஸ்ரீனிவாசனும் தன்னந்தனியே #திருமலைக்குச் சென்று தங்கி விட்டார். இதன் காரணமாக இன்றுவரை #ஏழுமலையானின் #நைவேத்தியத்தில் #கறிவேப்பிலை சேர்ப்பதில்லை.
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

சுக்கிரன் பத்தில் இருக்க பரிகாரம்

இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்தின் பத்தாம்

வீட்டில் சுக்கிரனானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படகூடிய

சாதக, பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றி

காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அன்பர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகவே அமையும் அரசு தொழிலில் உள்ளவர்களுக்கு வேலையில்

பல இடையூறுகள் ஏற்படும்

சொந்தத்தொழில், கூட்டுத்தொழில் ஆகியவை தொடங்குவது நல்லதல்ல. சிலர் வேலையிலிருந்து விடுபட்டு மாற்று

வேலைக்கு செல்வார்கள் குடும்பத்தில்

சிறு சிறு சண்டைகளும், தொந்தரவுகளும் ஏற்படும்

பரிகாரம் பேனலயலாருந்து வாடுப்ட்டு மாற்று

வேலைக்கு செல்வார்கள் குடும்பத்தில் சிறு சிறு சண்டைகளும், தொந்தரவுகளும்

ஏற்படும்

பரிகாரம்

ஸ்ரீசக்ர யந்திரத்தோடு மஹா கணபதி யந்திரம் வைத்து தினமும் பூஜிப்பது உகந்தது. மஞ்சள் துணியைக்

கட்டிக்கொண்டு ஆதித்ய ஸ்ருதய

மந்திரத்தை சொல்வது நல்லது திருச்செந்தூர் முருகனுக்கு காவடி தூக்கி

பிரார்த்தனை செய்வதும், சுப்ரமணியரின் புஜங்க ஸ்லோகத்தை 41 தடவை 41 நாட்கள்

செய்யலாம். வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் மகா மந்திரம்

சொல்லுவதும் நல்ல பலனாகும்
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

கலியுகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள்

● கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...

5000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய முன்னோர்கள்....

நம் ரிஷிகளும், முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர்.... இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள்....

பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.....

5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள்.... அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.... மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்...‌
    
1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [பாகவத புராணம் 12.2.1]

2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும் சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.
[பாகவத புராணம் 12.2.2]

3. ஆண்களும், பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்  துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். 
[பாகவத புராணம் 12.2.36)

4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலி குருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.
வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
[பாகவத புராணம் 12.2.4]

5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர்.
குளிப்பதாலும், அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். [பாகவத புராணம் 12.2.5]

6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான்.
முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும், பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.
[பாகவத புராணம் 12.2.6]

7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். 
தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். [பாகவத புராணம் 12.2.7]

8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.
(அரசின் அலட்சியப் போக்கினால்)     கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.
[பாகவத புராணம் 12.2.9]

9. கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள்.
[பாகவத புராணம் 12.2.10]

10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும்.
[பாகவத புராணம் 12.2.11]

11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதி காலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். [பாகவத புராணம் 12.3.42]

12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். [பாகவத புராணம் 12.3.41]

13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள்.
தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். 
[பாகவத புராணம் 12.3.38]

14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால்கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]

15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழி பெயர்க்கப்படும். 
●அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். 
போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும், காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.
[பாகவத புராணம் 12.3.32]

●கலியுகம் துன்பங்கள் நிறைந்தது.
ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது.
●மனத்தை உறுதியாக வைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும்.
●கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.
●கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது.
●இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும்.

□அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்!.

□மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும்.

ஓம் நமோ நாராயணா....

Saturday 3 November 2018

சாஸ்திர பிரச்சனைகளும் தீர்வுகளும் - மாலைமுரசு டிவி 009 - Dr Srikumar Astrologer

சாஸ்திர பிரச்சனைகளும் தீர்வுகளும் - மாலைமுரசு டிவி 009



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

சாஸ்திர பிரச்சனைகளும் தீர்வுகளும் - மாலைமுரசு டிவி 008 - Dr Srikumar Astrologer

சாஸ்திர பிரச்சனைகளும் தீர்வுகளும் - மாலைமுரசு டிவி 008



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com

Email ID :kamaleesrikumar@gmail.com