Tuesday 28 November 2017

குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்?

குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்?

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காகசெய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும்ஒன்று செய்துவிடமுடியாது.




குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொரு வருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரேஅளவில் இருக்கும்.குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால்அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜைசெய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.பிற தெய்வத்தைவணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள்பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தைவணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்குசென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும்.உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறைகண்டிப்பாக . நேரில் சென்று பூஜைசெய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜைசெய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரியவித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போதுதேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால்குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒருகடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச்சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டுவணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதைசெய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.


குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டுபூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களதுமணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடுகட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தைவழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.குலதெய்வவழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம்ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மைசெய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும்குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும்என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்துசொல்லும் மகான்களின் உண்மை.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும்ரகசியங்கள்

தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும்ரகசியங்கள்நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோசமாகிநம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாதுஅதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கிநமக்கு நம்மை செய்யும் ......
1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டுஅந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படிபடியாக குறையும்இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்துசெல்லும்குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாகதுளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விடவேண்டும் ..
2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல்கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழைபெற்று தரும் .
3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்யபணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளைகொடுத்துஆயுளை விருத்தி செய்யும் .
4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும்சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்குஇல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்றஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின்ஆசிகள் கிடைக்கும் .
5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்குஉதவுதல்தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும்கவர்ச்சியும் கொடுத்துவிடும் .
6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்துதவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்குசொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழுநோய் /குஷ்டம் கண்டவர் களுக்கு வைத்திய செலவு அல்லதுஅவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளைகொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்துஉதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டுவணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களைவளர்த்தல் (விலங்கு ,பறவைகள்),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல்,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல்செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .
8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல்,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம்செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின்ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும்நோய் (திருஷ்டி )நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்லதொழில் ,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .
9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின்உடலைகண்டதும் தீயிட்டு கொளுத்துவது , குடி கெடுத்தவன் ,குடிகாரன்,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம்நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு - கேது ஆசிகளை கொடுத்துஅதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும்ஆசிகளை தரும் .
நன்றிஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMARkamalee Illam, 133/10, Near Iyya Kovil,Very Near Vivekananda School,Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,Cell No: +91 996-208-1424, 893-950-5645.Email ID :nonenantha@gmail.comEmail ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 27 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer



பரிகாரமும் பலன்களும் 27 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show





நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 26 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer



பரிகாரமும் பலன்களும் 26 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show





நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 25 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer



பரிகாரமும் பலன்களும் 25 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show





நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 24 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer



பரிகாரமும் பலன்களும் 24 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show





நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Thursday 23 November 2017

வேலை கிடைக்க எளிய பரிகாரங்கள்


வேலை கிடைக்க எளிய பரிகாரங்கள்



வேலைதான் ஒருவரின் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது. சமூகத்தில் அவருக்குக் கிடைக்கும் மரியாதையைத் தீர்மானிப்பது. அவருக்கு அமையப்போகும் வாழ்க்கையைத் தீர்மானிப்பது அவர்கள் செய்யும் வேலையை பார்த்துதான். எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலை கிடைத்து விடும். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், பிடித்த வேலை கிடைக்குமா என்பதுதான் இங்கு கேள்வியாக அமைகிறது.

அரைக் காசு உத்தியோகமாக இருந்தாலும் அரண்மனையில் வேலை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் படித்து முடித்துவிட்ட அனைவருக்கும் அரசாங்கத்தில் வேலை கிடைக்காது. ஜாதகத்தில் அரசாங்க வேலை பெறுவதற்குரிய கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அது அமையும். அப்படிப்பட்ட ஜாதகர்கள் ஏழை வீட்டில் பிறந்திருந்தாலும் கல்வியில் உயர்ந்து அரசு வேலையை அடைவார்கள்.

பரிகாரம் :
♣ நல்ல வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்னைகள் விலக ஸ்ரீ பைரவரை ஞாயிற்றுக் கிழமை தோறும் தொடர்ந்து ஒன்பது வாரம் வழிபட வேண்டும். கடைசி வாரத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடிப் பலன் கிடைக்கும்.

♣ அரியக்குடி தென் திருவேங்கட முடையானுக்கும் தாயாருக்கும் 12 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிப்பட்டால் விரும்பிய வேலை கிடைக்கும்.

♣ அருள்மிகு ராமநாதர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், பிரகதீஸ்வரர் கோயில் பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் ஆகிய கோயிலுக்கு சென்று வழிபட வேலை கிடைக்கும்.

♣ அரச மரத்திற்கு தொடர்ந்து 43 நாட்கள் வேரில் நீர் விட்டு வந்தால் நினைத்த வேலை கிடைக்கும். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். பைரவருக்கு 27 மிளகுகளை கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை விட்டு விளக்கேற்றினால் வேலை கிடைக்கும்.

♣ காலை குளித்ததும் சிறுது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை சுற்றி பின்பு அதை வாசலில் எறிந்து விட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறுது கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்கவும். இது ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும் அந்த உப்பை தூர எறிந்து விடலாம்.

♣ புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை எடுத்து 13 முறை தலையை சுற்றி பின்பு அதை 4 துண்டாக வெட்டி நான்கு தெருக்கள் இணையும் இடத்தில் திக்கிற்கு ஒன்றாக எறிந்து விடவும். இது தொடர்ந்து முதல் நாள் செய்த அதே நேரத்தில் 7 நாட்கள் செய்ய வேண்டும். இது வேலை இல்லாதவரின் எதிர் மறை சக்திகளை அழித்து தடைகள் நீங்க வழி செய்யும்.
வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் :

ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா
விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷிமீச சுந்தரீ

இம்மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

இராமாயண மஹிமையின் கதை சுருக்கம்



இராமாயண மஹிமையின் கதை சுருக்கம்


தசரத மஹாராஜா செய்த யாகத்தின் பலனாய் அன்னை கோசலையின் மணிவயிற்றில் உதித்து, ரகுகுலத்திற்கு பெருமை அளித்து, வில்வித்தை வாள்வித்தையில் தேர்ந்து,
விஸ்வாமித்ர முனிவரின் யாகத்தை காத்து நின்று,
அகலிகைக்கு சாபவிமோசனமளித்து,




ஜனக நகர் சென்று, சிவ தனுசை வளைத்தொடித்து,நங்கை சீதையை கை பற்றி, சிற்றன்னை கைகேயின் ஆணையால் மரவுரி மான்தோல் தரித்து, மனையாள் சீதை சகோதரன் லக்ஷ்மணுடன் கானகம் சென்று,குஹனின் அன்பான உதவியால் கங்கையை கடந்து,சித்திரகூடம்தனில் தங்கி,
பரதனுக்கு பாதுகையை அளித்து, ராஜ்யத்தை ஆளச்செய்து,
அகஸ்தியரை தரிசித்து, பஞ்சவடி சென்று, அங்கு வந்த அரக்கி சூர்பணகையின் மூக்கை அறுக்கவைத்து, மாய மானான மாரீசனை கொன்று, சீதையை பிறிந்து மனம் தளர்ந்து, ஜடாயு செய்த உதவிக்கு நன்றி கூறி அதற்கு மோக்ஷம் அளித்து, ஸபரியை ஆசிர்வதித்து,அனுமனைக் கண்டு, சுக்ரீவனுடன் நட்பு கொண்டு,வாலியை வதைத்து,
அனுமனுக்கு அனுக்ரஹ பலமளித்து, விளையாட்டாக கடலை தாண்ட செய்து, அஸோக வனம்தனில் அமர்ந் துருந்த சீதையிடம் கனையாழியை கொடுக்கவைத்து,
ராவணனை கண்டு லங்கைக்கு தீயிட்டு வந்த அனுமனிட மிருந்து, சீதை கொடுத்தனுப்பிய சூடாமணியை பெற்று கொண்டு, அலைகடலில் அணைகட்டி பரிவாரங்க ளுடன் லங்கை சென்று, ராவணனை வென்று வதைத்து,
விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு,


அன்பு சீதைக்கு அக்னிதேவனின் ஆசியை பெற்று கொடுத்து,
ஆருயிர் சீதை ஆசை லக்ஷ்மண் தாசன் அனுமனுடன் நந்திக் ராமம் சென்று, அங்கு காத்திருந்த பரதனை அணைத்து கொண்டு, யாவரும் அயோத்தி திரும்பி,அங்கு கூடியிருந்த ஜனங்களுக்கு ஆசிகள் வழங்கிவிட்டு,அன்பு தாயார்களின் பொற்பாதங்களில் தலை வைத்து வணங்கி, அனுமன் தாங்கிய அரியணையில் அமர்ந்து,மணிமகுடம் ஏற்று கொண்ட மஹானுபாவன் ஸ்ரீராமபிரானை நான் தாளும் தடக்கையும் கூப்பி வணங்கி பஜிக்கிறேன்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 23 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer



பரிகாரமும் பலன்களும் 23 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show




நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Wednesday 22 November 2017

பூஜை செய்வதற்கான சில குறிப்புகள்


பூஜை செய்வதற்கான சில குறிப்புகள்



♠ பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூப தீபம் முடியும் போதும், பலி போடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சத்தத்தோடு செய்யப்படும் பூஜை நல்ல பலன் தரும்.

♠ கோவில்களில் அர்ச்சகரிடமிருந்து தான் பிரசாதங்களை பெற வேண்டும். நாமாக எடுத்துக் கொள்ள கூடாது.

♠ பெருவிரலும், மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களை சேர்க்க கூடாது.

♠ திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும்போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

♠ பூஜைக்குரிய பழங்கள், நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், வாழை, கொய்யா, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம் ஆகியவை.

♠ செண்பக மொட்டு தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

♠ மலர்களை கிள்ளி பூஜிக்க கூடாது. வில்வம், துளசியை மாலையாகவே பூஜிக்க வேண்டும்.

♠ முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும் இவை சிவ பூஜைக்கு ஏற்றவை.

♠ துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், செங்கழு நீர், மரிக்கொழுந்து, மருதாணி, தாபம், அருகு, நாயுருவி, விஷ்ணு க்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.

♠ குடுமியுள்ள தேங்காயை சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

♠ பூஜைக்கு செய்யக்கூடாத மலர்கள் வாசனை இல்லாதது, முடி புழுவோடு சேர்ந்தது, வாடிய மலர்கள், தகாதவர்களால் தொடப்பட்டவை, நுகரப்பட்ட மலர்கள், தரையில் விழுந்த மலர்கள்.

♠ தாமரை, நீலோத்பலம் போன்ற மலர்களை பறித்த அன்றே பூஜை செய்தல் வேண்டிய விதி இல்லை.

♠ ஒருமுறை இறைவன் திருவடியில் சமர்பிக்கப்பட்ட மலர்களை மீண்டும் எடுத்து பூஜிக்கலாகாது.

♠ மலர்களை முழுவதுமாக பூஜிக்க வேண்டும்.

♠ துலுக்க சாமந்தி பூவை பூஜைக்கு பயன்படுத்த கூடாது.

♠ பவள மல்லி சரஸ்வதிக்கு ஆகாது.

♠ தும்பை லட்சுமிக்கு ஆகாது.

♠ அருகம்புல் அம்பிகைக்கு ஆகாது.

♠ விஷ்ணுக்கு துளசி மாலை உகந்தது.

♠ சிவனுக்கு தாழம்பூ ஆகாது.

♠ விநாயகருக்கு துளசி ஆகாது.

♠ ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்திற்கு மஹாதீபம் அல்லது மஹா நீராஜனம் என்று பெயர்.

மாங்கல்யம் பலம் பெற சொல்ல வேண்டிய மந்திரம்

மங்களே மங்கள தாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களே ஸ்ரீ
மாங்கல்யம் தேஹிமே ஸ்தா

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 22 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும் 22 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com


Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 21 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும் 21 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com


Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 2011 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai

பரிகாரமும் பலன்களும் 20-11-2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com


Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 19 11 2017 1Yes Tv

பரிகாரமும் பலன்களும் 19 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com


Email ID :kamaleesrikumar@gmail.com

Sunday 19 November 2017

பரிகாரமும் பலன்களும் 18 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும் 18 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

கிருத்திகை நட்சத்திரம் பற்றி பார்ப்போம்....


கிருத்திகை நட்சத்திரம்



27 நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இந்ந நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார். கிருத்திகை நட்சத்திரத்தின் 1ஆம் பாதம் மேஷ ராசியிலும், 2,3 மற்றும் 4 ஆம் பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் அ, ஆ, இ, ஈ, உ, எ, ஆகியவை ஆகும்.

நட்சத்திரத்தின் பொது பலன்கள் :

ஆறுமுக கடவுளான முருகப்பெருமானும் இந்த கிருத்திகை நட்சத்திரத்தில் தான் பிறந்தார். கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு எந்த பாதிப்புமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல உடல் வலிமையும், புத்திசாலிதனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. இவர்களிடம் முன்கோபமும் அதிகமிருக்கும். ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர். கனவுலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்களாகவும், காரசாரமாக வாதிடுபவர்களாகவும் இருப்பார்கள்.

நட்சத்திரத்தின் திசை பலன்கள் :

✭ கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சூரிய திசை மொத்தம் 6 வருடங்கள் நடைபெறும். சூரிய திசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் பெற்றோருக்கு பல இன்னல்களும் உண்டாகும்.

✭ இரண்டாவது திசையாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறு ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், சுப பார்வை சேர்க்கையுடன் சந்திரனிருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

✭ மூன்றாவது திசையாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். இவர்களுக்கு முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.

✭ நான்காவது திசையாக வரும் ராகு திசை 18 வருடங்கள் நடைபெறுவதால் இந்த காலத்தில் நல்ல யோகத்தையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஐந்தவதாக வரும் குரு திசை காலங்கள் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆறாவதாக வரும் சனி திசையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். கிருத்திகை நட்சத்திரத்தை மார்கழி மாதத்தில் இரவு உச்சி வானில் காணலாம்.

நட்சத்திரத்திற்கான வழிபாட்டு ஸ்தலங்கள் :

காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
மருதமலை முருகன் கோவில்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

மஹா வராகி வழிபாடு பற்றி அறிந்து கொள்வோம்....


மஹா வராகி வழிபாடு :



>> தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

>> பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்; அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்.

>> கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

>> இந்த பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி. சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. சிவாலயங்களில் கன்னி மூலையில் இவர்களை காணலாம் ..

“ ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்

களிக்கும் இச் சிந்தையில் காரணமாம் காட்டித்

தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்

அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே ! ”

- திருமூலர்

உலகையே ஒளிர்விக்கும் பராசக்தி என்ற அம்பிகை நம் மனதில் எழுந்தருளினால், உண்மைப் பொருள் விளங்கும் ; மனம் தெளிவு பெறும் . அவளை அறிந்து கொள்பவருக்கு அனைத்துச் செல்வங்களும் வாய்க்கும் என்று திருமூலர் கூறுகிறார். அருள்மிகு முத்தவடுகநாத சித்தர், அம்பிகையின் மறுவடிவமான வராஹி அம்மனிடம் சரணடைந்து சித்தி பெற்றார். அதுவும் தமது ஐந்தாம் வயதில்.

அபிராமி அந்தாதி :

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”

“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’

என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய அம்பிகையின் வடிவம் வாராஹி.

அன்னை வராகி வழிபாடு :

தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வராகியை நமது வீட்டில் இருக்கும் பூஜையறையில் மந்திர ஜபத்தால் வழிபடலாம்;பூஜையறை இல்லாதவர்கள் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கலாம்;

அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி.

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!

தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்:
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

இறுதியில் தீயில் வெந்து சாம்பலாகும் தத்துவத்தை தாங்கியுள்ளது திருநீறு.!!!



இவ்வுலகில் பிறந்து உயிரினங்கள் யாவும் இறுதியில் தீயில்வெந்து சாம்பலாகும் தத்துவத்தை தாங்கியுள்ளது திருநீறு.
காராம் பசுவின் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
திருநீறு உடலில் உள்ள நீர்த்தன் மையை உறிஞ்சவல்லது. நம்மை சுற்றியுள்ள அதிர்வலைகளில் நமக்கு நன்மை பயக்ககூடிய நல்ல அதிர்வலைகளை மட்டுமே உள்வாங்கும் தன்மையுடையது.
திருநீற்றை முக்குறியாக அணிகிறோம். ஏனென்றால் ஆணவம்,கன்மம், மாயை என்ற மூன்று மலங்களை வேரோடு நீக்கினால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.
திருநீறு இன்னும் பற்பல நன் மைகளை நமக்கு அருள்கிறது.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கள்
திருஆலவாயான் திருநீறே
என்பது திருஞானசம்பந்தர் திரு நீற்றுப்பதிக வாக்கு.
கடவுள் பக்தி என்றால் என்ன?
பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.
செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான்.
செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.
செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார்.
பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்;
தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார்.
அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.
விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார்.
போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்த வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.


அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார்.
அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்ட
இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.
நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்த
வருவதாகச் சொல்கிறார்.
அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்ட
இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார்.
அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.
நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.
அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது.
ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர்,அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.
அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர். கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே ”உண்மையான பக்தி” இப்பொழுது தெரிகிறதா?

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Friday 17 November 2017

பரிகாரமும் பலன்களும் 17 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer


பரிகாரமும் பலன்களும் 17 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 16 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer


பரிகாரமும் பலன்களும் 16 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 15 11 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும்   15 11 2017   1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

சித்ரா பௌர்ணமி சிறப்புக் கோவில் : மங்கலதேவி கண்ணகி கோவில்


சித்ரா பௌர்ணமி சிறப்புக் கோவில் : மங்கலதேவி கண்ணகி கோவில்




மங்கலதேவி கண்ணகி கோவில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோவில் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்

கோவில் வரலாறு :

கோவலன், சிலம்பு திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனால் மரண தண்டனை அளித்துக் கொல்லப்படுகிறான். இச்செய்தி அறிந்த கண்ணகி அரண்மனைக்குச் சென்று தன்னிடமுள்ள மற்றொரு கால் சிலம்பை உடைத்துக் காண்பித்துத் தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபித்து அறநெறி தவறிய பாண்டிய மன்னனையும், துணை நின்ற தீயோரையும், அவர்கள் வாழ்ந்த மதுரை மாநகரையும் தன் கற்பின் சக்தியால் எரிந்து போகச் சாபமிடுகிறாள்.

அவள் சாபத்தால் மதுரை மாநகரமே தீப்பற்றி எரிந்து சாம்பலானது. மதுரையை எரித்த கண்ணகி அங்கிருந்து வைகை ஆற்றின் தென்கரை வழியாக, நடந்து சென்று சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள்.

இங்கு வசித்து வந்த குன்றத்துக் குறவர்களிடம் தனது வாழ்க்கை பற்றியும், தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன், கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.

இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும், கேட்டதையும் கூறினார்கள். இதை கேட்ட மன்னன் சேரன் செங்குட்டுவன், இமயத்திற்கு சென்று கல் எடுத்து, அதை கங்கையில் நீராட்டி, கண்ணகிக்கு சிலை வடித்து, அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

கோவில் திருவிழா :

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோவிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் சித்திரை முழுநிலவு திருவிழாவின் போது மட்டும் பக்தர்களை அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லாததால் இந்தக் கோயில் பராமரிப்பின்றி கோவிலின் பல பகுதிகள் சிதைந்து போய்விட்டன. கண்ணகி சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. தற்போது, திருவிழாவின் போது சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Thursday 16 November 2017

பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை சாஸ்திரங்கள்


பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை சாஸ்திரங்கள்



✡ சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது.

✡ பெண்கள் பூசணிக்காயை உடைக்கக் கூடாது. அரிவாளாலோ, கத்தியினாலாவது முழுக்காயை உடைக்கலாகாது.

✡ கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக் கூடாது. உடைக்கும் அதிர்ச்சி நுண்ணலைகள் மூலம் கர்ப்பத்தைத் தாக்கும்.

✡ இரவில் வீட்டைப் பெருக்கலாகாது. பெருக்கினாலும் குப்பையை தெருவில் கொட்டக் கூடாது. பகலில் குப்பையை வீட்டினுள் ஓரிடத்தில் குவித்து வைக்கலாகாது. அப்படி மூலையில் குவித்து வைத்தால் நல்ல நாளில் எல்லோருடனும் கலந்து இருக்க முடியாமல் விலக்கிவிடும்.

✡ அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். வேலைக்காரர்களை வைத்து கோலமிடக் கூடாது. அந்த வீட்டின் பெண்ணே இந்த வேலையை செய்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

✡ உணவுக்கு இலை போடு முன் இலைக்குக் கீழே பசும் சாணி அல்லது வெறும் ஜலத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.

✡ கையால் அன்னத்தையோ காய்கறிகளையோ பரிமாறக் கூடாது.

✡ தன் கணவன் உத்தரவின் பேரில் தானதர்மம் மற்றும் விரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

✡ எந்தப் பொருளையும் இல்லை என்று கூறாமல் அந்தப் பொருள் வேண்டும். இந்தப் பொருள் வேண்டும், வாங்கி வாருங்கள் என்றே கூற வேண்டும்.

✡ எந்தக் குறையையும் எண்ணிக் கண்ணீர் விடக்கூடாது, அழுத வீட்டில் செல்வம் நிற்காது.

✡ வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் போது எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.

✡ பிரதோஷ காலத்தில் அதாவது மாலை 6 மணியளவில் பெண்கள் வீட்டில் படுத்திருக்கக் கூடாது.

✡ அம்மி, உரல் மீது அமரக் கூடாது. வீட்டு வாசற்படியை மிதிக்கக் கூடாது.

✡ கஷ்டம் வரும்போது அசப்தங்களைக் கூறக்கூடாது.

✡ அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.

✡ மாலை நேரங்களில் தீபம் ஏற்றி நமஸ்கரிக்கும் பெண்மணிக்கு ஆசிகூறத் தேவர்கள் இல்லங்களுக்கு வருகின்றார்கள். எனவே தீபம் வைக்கும் நேரத்தில் பெண்கள் வேறு இடங்களுக்குச் செல்லக் கூடாது.

✡ பெண்கள் கையில் வளையல் அணியாமலும், தலையை விரித்துப் போட்டும் விளக்கேற்றக் கூடாது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com