Thursday 28 December 2017

ஓம் றீங் ரஹணபவச - செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாக

Om Reeng Rahanabavasa ஓம் றீங் ரஹணபவச - செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாக 108 Repeat



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

"ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் அற்புதங்கள்"🙏🙏🙏



'இங்கே வா, உனக்கு ஒரு அற்புதம் காண்பிக்கிறேன்’ என்று சொன்ன ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜ ஜோசியர்-மரகதம் தம்பதியனருக்கு மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்.
அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது ஒரு கிருஷ்ணர் பொம்மையை அவர் கையால் தொட்டு வாங்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தக் கூடையில் இருந்த நூற்றுக்கணக்கான பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. அதனால், ‘தங்கக் கை’ சேஷாத்ரி என்று இவர் அழைக்கப்பட்டார்.
வேதம், பாஷ்யம், ஸ்லோகம் என அனைத்தையும் சிறு வயதிலேயே நன்கு கற்றுணர்ந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சிற்றப்பாவால் அன்புடன் வளர்க்கப்பட்டார்.
ஆனாலும் அவரது கவனம் உலகியலில் செல்லவில்லை. ஆன்மீகத்தையே மனம் விரும்பியது.
வடநாட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்திருந்த பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீக்ஷை பெற்றார். அதன் பின் மிகக் கடுமையான யோக, தவப் பயிற்சிகளை மேற்கொண்டார். உண்ணாமல், உறங்காமல் மயானத்தில் அமர்ந்து தவம் புரிந்தார். இளம் பருவத்திலேயே ஞான வைராக்ய நிலையை அடைந்தார். அஷ்டமா சித்திகள் உட்பட பல்வேறு ஆற்றல்களும் கைவரப்பெற்றார்.
தாயின் மறைவுக்குப் பின் அவரது அறிவுரையின் படி திருவண்ணாமலை திருத்தலத்தை வந்தடைந்தார். ஞானியரை ஈர்க்கும் ஞான மலை தன்னுள் இவரை ஈர்த்துக் கொண்டது.
ஸ்வாமிகள் அங்கு வாழ்ந்த காலத்தில் தம்மை நாடி வந்தவருக்கு அருளாற்றலை வாரி வழங்கினார். அவரது கை பட்டால் தொட்டது துலங்கியது. அவர் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களை வீசி எறிந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிட்டியது.
அவர் ஆசிர்வதித்தாலோ, கட்டியணைத்தாலோ அவர்களது பாவம் நீங்கியது. பித்தரைப் போலவும், மனநிலை பாதித்தவரைப் போன்றும் காட்சியளித்த ஸ்வாமிகள் முக்காலமும் உணர்ந்தவராக இருந்தார். அதேசமயம் குறுகிய நோக்கத்துடனும், தீய எண்ணத்துடனும் தம்மை நாடி வந்தவர்களை விட்டு ஒதுங்கினார்.
அவர்கள் கண்களுக்குப் படாமல் தனித்திருந்தார். தான் என்ற அகந்தை மிகுந்தவர்களையும், ஆணவம் பிடித்த தீயவர்களையும் மகான் புறக்கணித்தார். உண்மையான பக்தியும், அன்பும் உள்ளவர்களின் ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவினார். தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அற்புதங்கள் புரிந்து பலரது கர்மவினைகள் அகல மகான் காரணமாக இருந்தார்.
மகானின் அற்புதம்
சேஷாத்ரி ஸ்வாமிகள் எப்போதும் திருவண்ணா மலையில் உள்ள கம்பத்தடி இளையனார் மண்டப வாசலிலேயே உட்கார்ந்திருப்பார்.
புதிதாக வந்திருக்கும் பலரும் அவரை யாரோ ஒரு சாதாரண பரதேசி என்றே எண்ணுவர். அவரது அருமை, பெருமை தெரிந்தவர்களோ மகானின் பார்வை எப்போதும் தம் மேல் படும், தமது கர்ம வினை அகலும் என்று காத்திருப்பர்.
சிலருக்கு தங்கள் தவப்பயனால் மகானின் அருள் கிடைக்கும். சிலருக்குக் கிடைக்காது. சில வெளியூர் பக்தர்கள் சேஷாத்ரி ஸ்வாமிகள் மீது அதிகப் பற்று வைத்திருந்தனர். ஒரு முறை அவரை தரிசனம் செய்ய வந்த அவர்கள், அவரை தங்கள் ஊருக்கே கூட்டிச் செல்ல முடிவெடுத்தனர். எனவே ஸ்வாமிகள் மறுத்தும் கேளாமல், அவரை தங்கள் கையோடு கூட்டிக் கொண்டு ரயில் ஏறி விட்டனர். ரயிலும் புறப்பட்டு விட்டது. திருவண்ணாமலை எல்லையைத் தாண்டும் சமயம். ஓடும் ரயிலிலிருந்து மகான் கீழே குதித்து விட்டார். உடம்பெல்லாம் காயம். ரயிலும் நின்று விட்டது.
கார்டும் டிரைவரும் வந்தனர். மகானைக் குற்றம் சாட்டினர். அவர்கள் மகானைப் பற்றி அறியாதவர்கள் என்பதால் மகானை பலவாறாகத் திட்டினர். அதுபோன்றே மகானின் அருமை தெரியாத சிலர் இதனை தற்கொலை முயற்சி என்றும், அவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொல்லினர். அவ்வாறே மகானைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்காக குண்டுக் கட்டாக ரயிலில் ஏற்றினர். டிரைவரும் ரயிலைக் கிளப்பினார். ரயில் ஓர் அங்குலம் கூடக் கிளம்பவில்லை. டிரைவர் பல முறை முயற்சி செய்தும் பலனில்லை. வண்டி நகரவே இல்லை. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கக் கூட்டம் சேர்ந்து விட்டது.
அதில் சில சேஷாத்ரி பகவானின் பக்தர்களும் இருந்தனர். நடந்ததை அறிந்தனர். கார்டிடமும், டிரைவரிடமும், மகானின் பெருமையை விளக்கினர். அவரை விடுவிக்கும்படி வேண்டினர். பகவானைக் கடத்திய பக்தர்களையும் கண்டித்தனர்.
டிரைவரும், கார்டும் தங்கள் செயலுக்காக வருந்தி ஸ்வாமிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். மகானைக் கூட்டிக் கொண்டு சென்ற பக்தர்களும், தங்களை மன்னிக்குமாறு வேண்டி அவர் தம் தாள் பணிந்தனர்.
ரயிலிலிருந்து ஸ்வாமிகள் கீழே இறக்கி விடப்பட்டார். உடனே அவர் ‘ஹா ஹா’வெனச் சிரித்தார். டிரைவரும் ரயிலைக் கிளப்ப முயற்சித்தார். மெதுவாக ரயிலைத் தடவிக் கொடுத்த மகான், பின்னர் ‘போ, போ’ என்றார். உடன் ரயில் எந்தத் தடங்கலுமில்லாமல் புறப்பட்டுவிட்டது. காண்போர் வியக்கும் வண்ணம் நடந்த இந்த நிகழச்சியின் மூலம் சேஷாத்ரி ஸ்வாமிகளின் பெருமை மூலை முடுக்கெல்லாம் பரவியது.
ஒருமுறை வெங்கடேச முதலியார் என்னும் அடியவரின் வீட்டிற்கு ஸ்வாமிகள் சென்றிருந்தார். அங்கு இருந்த அவரது துணைவியார் சுப்புலக்ஷ்மி அம்மாள் மகானை வலம் வந்து தொழுதார்.
‘இங்கே வா, உனக்கு ஒரு அற்புதம் காண்பிக்கிறேன்’ என்று சொன்னார் ஸ்வாமிகள். கொல்லைப் புறத்திற்குச் சென்றார். வானத்தைப் பார்த்து ’வா வா’ என்று சொன்னார். அவ்வளவுதான். சற்று நேரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் அந்தத் தோட்டத்தில் வந்து இறங்கின. பலவித வண்ணங்களில், பல வித நிறங்களில் இருந்த அவை ஸ்வாமிகளின் தோள் மீதும், தலை மீதும் அமர்ந்து குரலெழுப்பின. அவற்றைப் பார்க்கப் பெரும் கூட்டம் கூடி விட்டது. ’போதும் விளையாட்டு’ என்று சுப்புலக்ஷ்மி அம்மாள் ஸ்வாமிகளிடம் சொன்னதும் சுவாமிகள் ‘சூ சூ’ என்றார். சற்று நேரத்தில் அவை ஒவ்வொன்றாகப் பறந்து சென்று விட்டன.
தம்மை அணுகிய பல்லாயிரக்கணக்கான மக்களை மலை சுற்ற வைத்த பெருமை இம்மகானுக்குண்டு. அண்ணாமலையில் கால் வைத்த நாள் முதல் தம் இறுதிக்காலம் வரை வேறு எங்கும் செல்லாது, அண்ணாமலையையே தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து முக்தியடைந்தார்.
திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில், அக்னி லிங்கத்தை அடுத்து, ரமணாச்ரமத்திற்கு முன்னால் இம்மகானின் மஹா சமாதி ஆலயம் அமைந்துள்ளது.
தென்நாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏
ஓம் நமசிவாய சிவாய நமஓம்🙏

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

காலபைரவர் - பற்றி....



ஒரு முறை பிரம்மா தனக்கு ஐந்து தலை இருப்பதாக கர்வம் கொண்டு சிவனை நிந்தித்தார். எனவே கோபம் கொண்ட சிவபெருமான் அருகே இருந்த ருத்ரனிடம் பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டிக்கும்படி கூறினார்.
ருத்ரனும் பைரவர் உருவம் கொண்டு பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டித்தார் கர்வம் அடங்கிய பிரம்மா பைரவரை வணங்கினார். சிவனை வணங்கினார். அவரை மன்னித்தார் சிவன். பின்னர் பிரம்மனின் தலையை துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவபெருமானிடம் வேண்டினார் பைரவர்.
பூலோகம் சென்று பிச்சை எடுத்தால் இந்த தோஷம் நீங்கும் என சிவபெருமான் பைரவரிடம் கூறினார். பைரவர் அவ்வாறே பிச்சை எடுத்து வரும்போது குடந்தை அருகே உள்ள திருவலஞ்சுழியில் அவரது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
பின் அங்குள்ள ஸ்வேத விநாயகரை பைரவர் வேண்ட அவர் பைரவர் முன் தோன்றி, பைரவரின் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசும்படியும்; அது எங்கு சென்று விழுகிறதோ அந்த இடத்தில் கோயில் கொண்டிருப்பாயாக எனக்கூற பைரவரும் அவ்வாறே செய்தார். அந்த சூலாயுதம் ÷க்ஷத்திரபாலபுரத்தில் போய் விழ, பைரவரும் அத்தலத்திலேயே கோயில் கொண்டார்.
காலபைரவர் ÷க்ஷத்திரபாலகர் என அழைக்கப்பட்டார். அவரது பெயரே அந்த ஊருக்கும் வழங்கலாயிற்று.
பொதுவாக பைரவர் மிகவும் உக்கிரமாகக் காணப்படுவார். ஆனால் இங்குள்ள காலபைரவர் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால் மிகவும் ஆனந்தமாகக் காணப்படுகிறார். அதனாலயே இங்குள்ள காலபைரவர் ஆனந்த காலபைரவர் என அழைக்கப்படுகிறார்.
விரித்த சடை மேல் நோக்கி இருக்க, நான்கு கரங்களிலும் கபாலம் சூலம், பாசம், டமருகம் ஆகியவைகளைக் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார் காலபைரவர்.
எல்லா சிவாலயங்களிலும் நடராஜர், பிரதோஷ மூர்த்தி, தட்சிணாமூர்த்தி என சிவ பெருமானின் திருமூர்த்தி பிம்பங்கள் அமைந்திருப்பது இயல்பு. இருப்பினும் பைரவருக்கு அனைத்து ஆலயங்களிலும் தனிச் சிறப்பு உண்டு.
அசுர கணங்கள் பூலோகத்துக்கும் தேவலோகத்துக்கும் தொல்லைகள் தந்த போதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாக பைரவரை தோற்றுவித்து, அசுரர்களை அழித்து, மக்களை மகிழச் செய்தார் எனச் சொல்வதுண்டு. சிவபெருமானுடைய குமாரர்களாக ஐந்து பேரைச் சொல்வதுண்டு அவர்கள் பஞ்ச குமாரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
விநாயகர்,
முருகன்,
சாஸ்தா,
வீரபத்திரர்,
பைரவர்
என்பவர்களே அந்த ஐந்து குமாரர்கள்.
(அருள்வார்)
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

கர்த்தர் யார் ?-காஞ்சி மஹான்

கர்த்தர் யார் ?-காஞ்சி மஹான்
***********************************

ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு,
தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன்
வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். அவர் நிறைய படித்தவர்; அபரிமிதமான பேச்சாற்றலால், மதக் கொள்கைகளை
அடுக்கிக் கொண்டே போனார்.
தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள்
இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது.....
யாரிடம்?
"அன்புதான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும் வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர்
எங்கள் பிதா.." மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாக்ஷியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார்.
காரணம், எங்கள் பிதா...என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேஸாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது.
"ஹிந்து மதத்லேயும் அன்புக்கு ரொம்ப முக்யத்வம் உண்டு! "அன்பே சிவம்"...ங்கறது பெரியவால்லாம் சொன்ன வாக்கு!
திருமூலர்ன்னு ஒரு பெரியவர் திருமந்திரம்ன்னு ரொம்ப ஒசத்தியான புஸ்தகம் எழுதியிருக்கார். அதுல அன்பைப்பத்தி,
மனித நேயத்தைப் பத்தி ரொம்ப அழுத்தமா சொல்லியிருக்கார்.
விஷ்ணு சஹஸ்ரநாமம்...ன்னு மஹாபாரதத்ல வருது. அதுல, "கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா"ன்னு பகவானுக்கு பேர்
சொல்லப்பட்டிருக்கு.
நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்..ன்னு சொல்லறேள். உங்க மதத்துக்கு எத்தனையோ காலத்துக்கு
முன்னாடியிலிருந்தே....நாங்க பகவானை "கர்த்தர்"ன்னு சொல்லிண்டிருக்கோம்!
ஒங்களோட மதப்ரசாரங்கள் எல்லாத்துலயும், எங்களோட மதம், இதிஹாஸ புராணங்கள்,கடவுள்கள் எல்லாத்தையும் நிந்தை
பண்றேள்!
ஆனா, நாங்க எந்த மதத்தையோ, மதத் தலைவர்களையோ, தெய்வத்தையோ நிந்தனையாவோ, கொறையாவோ
பேசறதில்லை!
ஏன்னா ஹிந்து மதம்தான் மிச்ச எல்லா மதங்களுக்கும் தாயார் மாதிரி !
ஒரு தாயார், தன்னோட கொழந்தை
துஷ்டனா இருந்தாக் கூட திட்ட மாட்டா!.....
நீங்கள்ளாம் ஹிந்து சமயப் பண்டிதாளை மீட் பண்ணறதுக்கு விரும்பாம, எதுவுமே தெரியாத பாமர ஜனங்கள் கிட்டப் போய்
வாசாலகமா [வாய் ஜாலமாக] பேசறேள் !
எங்களுக்கு அனுஷ்டானம் முக்யம் ; ஒங்களுக்கு ப்ரசாரம் முக்யம்; அதோட பாமர
ஜனங்கள்ட்ட போனதுமே ஒங்களோட மதத் தத்துவத்தை சொல்றதில்லை;
பால் பவுடர், ரொட்டி, துணிமணி...ன்னு குடுத்து
ஆசை காட்டி இழுத்துக்கறேள்!
மொதல்ல அவாளுக்கு காப்பு மாதிரி பணம் குடுக்கறேள்... அப்றமா மதத்தைப் பத்தி பேசறேள்...."
பாதிரியார் சங்கடமாக நெளிந்தார்!
உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் பெரியவாளுடைய ஒவ்வொரு
சொல்லும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டது!
"எங்கள் கர்த்தர்....தன் ரத்தத்தாலே பாவிகளின் பாவங்களைக் கழுவுகிறார்" கட்டக்கடைசியாக எதையோ சொல்ல வேண்டும்
என்று சொன்னார்.
பெரியவா மறுபடியும் புன்னகைத்தார்...."கர்த்தர்...ரொம்ப கருணையானவர்...ங்கற ஸ்துதி ஞாயந்தான்!
ஆனா மத்தவாளை
நிந்திக்கக் கூடாதுங்கறதும் ஞாயந்தானே ?...."
பாதிரியார், "நிந்தனை பத்தி என்னை சிந்தனை செய்ய வெச்சிட்டீங்க!.." என்று முக மலர்ச்சியோடு கூறவும்,
ஒரு பழத்தை
ப்ரசாதமாக குடுத்தார் பெரியவா. அவருக்கும் திருக்கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார்.
நம்முடைய மதத்தைப் பற்றி நாம் யாரிடமும் ப்ரசாரம் பண்ணி எதையும் ஸ்தாபிக்க அவச்யமேயில்லை! ப்ரசாரம்
பண்ணுவதற்கு "இவ்வளவுதான் இதில் இருக்கிறது" என்ற full stop ப்பை நம்முடைய மத நூல்களுக்கு [இதிஹாஸ,புராணங்கள், சாஸ்த்ரங்கள் என்று நீண்டு கொண்டே போகும்] நம்மால் வைக்க முடியாது. சங்கரர், மத்வர், ராமானுஜர், ஆழ்வார்கள்,
நாயன்மார்கள் இன்னும் ஏகப்பட்ட பக்த சிரோன்மணிகள் கூட ப்ரசாரம் பண்ணாமல், சாஸ்த்ர சம்மதமான தங்கள்
அனுஷ்டானத்தில் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
எனவே அவரவர் எந்தக் கடமையை செய்ய வேண்டுமோ, அதை ஒழுங்காக பண்ணிக் கொண்டிருந்தாலே, நம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது என்பதே மஹான்களின் வாக்கு!
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

டாக்டர் ஸ்ரீ குமார் ஜோதிடம் - விளம்பரம்

டாக்டர் ஸ்ரீ குமார் ஜோதிடம்
ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து, பரிகாரம் போன்ற அணைத்து வகையான ஜோதிட முறையிலும் உங்களுக்கு பலன்கள் வழங்கப்படும்..



நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

Tuesday 26 December 2017

அரச மர வழிபாடு - அரச மரப் பிரதட்சிணப் பிரயோகம் !!!

அரச மரப் பிரதட்சிணப் பிரயோகம் !!!

ஒரு தேய்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய அஸ்தமன வேளையில் ஊருக்கு வெளியில்,காட்டில், அல்லது மயானத்தில் உள்ள ஒரு அரசமரத்தடியில் மஞ்சளால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் நல்லெண்ணெய் விட்டு அகல் விளக்கேற்றி, விளக்கிற்கு குங்குமம்,மஞ்சள் வைத்து பாயசம் படைத்து வழிபடவும்.பின்னர் பிரதட்சிணமாக அதாவது இடமிருந்து வலமாக 11 தடவை வலம் வரவும்.வலம் வந்து முடிந்தவுடன் விளக்கின் முன் நின்று கவலை, பிரச்சனை என உங்கள் மனக்குறை என்னவோ அது விரைவில் தீர வேண்டிக்கொள்ளவும்.பின்னர் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடவும்.இதைக் குறைந்தது 3 வாரம் செய்யவும்.துன்பங்கள் நீங்கும்,சுபகாரியத்தடைகள் தீரும்.தொழில் மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் ,பணப்பற்றாக்குறை என வேண்டிக்கொண்ட பிரச்சனை என்னவோ அது தீரும் அல்லது அதைத் தீர்க்கும் வழி மனதில் தோன்றும்.
அரசமர வழிபாடு பற்றி மேலும் விபரங்கள்:-
அளிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது.அரச மரத்தைச் சுற்றினால் அறிவு வளரும்.மரத்தினடியில் அமர்ந்தால் மனம் தெளிவடையும்.அங்கு ஜெபம் செய்தலோ ,தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரம் பாராயணம் செய்தலோ நிறைய பலனை அடையலாம்.
அகிம்சையை போதித்த புத்தர் இந்த அரசமரத்தடியில் அமர்ந்து ,தவம் செய்து ஞானியாக ஆனார்.
கண்ணபிரான் கீதையில் 'மரங்களுக்குள் நான் அரச மரமாக இருக்கிறேன் 'எனகிறார்.
அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகா விஷ்ணுவும்,நுனிப் பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள் ஆகவே மும்மூர்த்திகளின் சொரூபமாக அரசமரம் திகழ்கிறது. அதனால்தான் அரசமரத்திற்கு பூஜை செய்வது,பிரதட்சணம் செய்வது ,துன்பத்திற்கு காரணமான பாவங்களை போக்கி நல்ல அறிவை பெற்று தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன .
எந்த நேரத்தில் அரச மரத்தைச் சுற்றலாம் ?
சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை 10.40 மணி வரையிலும் ,சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால்,அப்பொழுது அதிலிருந்து வெளிவரும் காற்று நமக்கு ,நமது உடலுக்கு நன்மையை தரும்.ஆகவே காலை 10.40 மணிக்குள் அரச மரத்திற்கு பூஜை,நமஸ்காரம் செய்வது நல்லது.
மற்ற நாட்களை விட சனிக்கிழமை ,காலை வேளையில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாக இருப்பதால் சனிக் கிழமையே வலம் வருவது நன்மைப்பயக்கும் .அரச மரத்தை 7 முறை சுற்றி வர வேண்டும்.
குழந்தைப் பாக்கியம் இல்லாத தோஷத்தை போக்கி ,குழந்தைப் பாக்கியம் தர இந்த வழிபாடு மிகவும் சுலபமானது.
அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றை தொட்டு பார்த்தாளாம் என்பது பழமொழி.அரசமரத்தை காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக் கூடியது.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக் கிழமை காலை சுமார் 8.20 மணிக்குள் அரச மரத்தை பக்தியுடன் 12,54,108 முறை வலம் வர வேண்டும்.தீராத நோய் தீரும்.
சனிக்கிழமை மட்டுமே அரசமரத்தை தொட்டு வணங்க வேண்டும்.மற்ற நாட்களில் அரச மரத்தை கையால் தொடக் கூடாது.
அரச மரத்தைச் சுற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபினே
அக்ரதச் சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:
அரசமரத்தின் சக்தி பெரியது .அத்துடன் நம் ஆனை முக விநாயகரை வழிபட்டால் நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தேடி தரும் .எனவேதான் நம் முன்னோர்கள் அரசமரத்துடன் விநாயகரையும் வைத்து வழிபட்டனர். நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.
அமாவாசை திதியும்,திங்கட் கிழமையும் இணைத்து வரும் நாள் அமாசோமாவரம் என்று பெயர்.இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம் பெறுவோம்.
தினம் தோறும் அரசமரத்தை சுற்றுவது நன்று.எந்தெந்த கிழமைகளில் சுற்ற என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
திங்கள் ------மங்களம் உண்டாகும்
செவ்வாய் ----- தோஷங்கள் விலகும்
புதன் -------வியாபாரம் பெருகும்
வியாழன் -----கல்வி வளரும்
வெள்ளி ----சகல செளபாக்கியம் கிடைக்கும்
சனி -------கஷ்டங்கள் விலகி லக்ஷ்மியின் அருள் கிடைக்கும்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அத்தி வரதர், தங்க பல்லி:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அத்தி வரதர், தங்க பல்லி:


அத்தி வரதர்:
பிரம்மா நிறுவிய அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசிக்கலாம். 1938, 1979 ஆம் ஆண்டுகளில் வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள்
மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் 2019 ல் இத்தகைய தரிசனம் கிட்டும்!
முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.
தங்க பல்லி:
பல்லி வரலாறு : ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்டு முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என கூறிவிட்டார்.பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.பெருமாள் உங்கள் ஆத்மா வைகுந்தம் செல்ல சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோசம் நீங்கி ஷேமம் உண்டாகும். சூரியன் சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.ஆகையால் இத்தரிசனம் மிக முக்கியமானதாகும். தோஷ நிவர்த்தி பெற இந்த பல்லிகளை வணங்குகிறார்கள்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

சுண்டு விரலில் வெள்ளி மோதிரம் அணிவதால் நிகழும் அற்புத மாற்றங்கள்!

சுண்டு விரலில் வெள்ளி மோதிரம் அணிவதால் நிகழும் அற்புத மாற்றங்கள்!

வேத ஜோதிட கருத்துப்படி வெள்ளி என்பது வியாழன் கோளையும், சந்திரன் போன்றவற்றை குறிக்கிறது. நமது உடலில் உள்ள ஐம்பெரும் பூதங்களான நீர், கபம் இரண்டையும் சமநிலைபடுத்துகிறது. வேத சாஸ்திரங்களை எடுத்துக் கொண்டால் வெள்ளி உலோகம் அணிந்திருப்பவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம், அழகு, செல்வம் மற்றும் சந்தோஷம் சந்தோஷம் என்று எல்லாம் கை கூடி வரும் என்று சொல்லுகிறது.
வேத ஜோதிடப்படி நீங்கள் வியாழன் மற்றும் சந்திர கோள்களின் முழுப்பயனையும் பெற விரும்பினால் அதற்கு வெள்ளி உலோகம் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. மேலும் இதை நமது உடலில் அணியும் போது நமது உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வாழ்க்கையில் உதிக்கும் நேர்மறை எண்ணங்கள்:
வீட்டில் நிறைய வழிகளில் வெள்ளி பொருட்களால் அலங்கரிக்கும் போது நமது வீட்டில் நேர்மறை எண்ணங்கள் உதயமாகின்றன. வெள்ளி அணிகலன்கள், வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி அழகு பொருட்கள் என்று வைக்கும் போது நமது உள்ளத்திலும் வாழ்க்கையிலும் நேர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன.
குழப்பங்கள் விலகும்:
நீங்கள் சமாளிக்க முடியாத நோயுடனோ அல்லது மனக் குழப்பங்கள், பிரச்சினைகள் இவற்றுடன் காணப்பட்டால் அந்த சமயங்களில் இந்த வெள்ளி உலோகம் உங்கள் மனதில் ஒரு நிம்மதியையும் அமைதியான அலைகளையும் இட்டுச் செல்கிறது. உங்கள் சுண்டு விரலில் அணிந்திருக்கும் வெள்ளி மோதிரத்தை ஒரு தண்ணீர் பெளலில் வைத்து பார்த்தால் அது ஆற்றலை கிரகிக்கும் சக்தியுடன் காணப்படுவது தெரியும்.
வெள்ளி மோதிரத்தை கொண்டு ஆற்றலை சுத்தம் செய்யும் முறை:
இதற்கு 3 முறைகள் செய்யப்படுகின்றன. முதலில் ஆன்லைனில் அல்லது மார்க்கெட்டில் வெள்ளி மோதிரம் வாங்கி கொள்ளுங்கள். ஒரு வியாழக்கிழமை அன்று இரவு முழுவதும் தண்ணீரில் வெள்ளி மோதிரத்தை வைத்து விடுங்கள்.
இது ஆற்றலை சுத்தம் செய்ய செய்யப்படுகிறது. இப்பொழுது இந்த மோதிரத்தை நீங்கள் கும்பிடும் பூஜை அறையில் வைத்து மனசார கடவுளிடம் பிராத்திக்க வேண்டும். இப்பொழுது இந்த மோதிரம் உங்களுக்கு நிறைய பலன்களை கொடுக்க கூடியதாக அமையும்.
ஆச்சரியமான பலன் :
கடைசியாக இந்த மோதிரத்தை சந்தன கட்டையில் வைத்து முன்னாடி உள்ள ஆற்றல்களை எல்லாம் தூய்மை செய்து உங்கள் அழகான சுண்டு விரலில் அணிந்து கொள்ளுங்கள். இதற்கு அப்புறம் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் மற்றும் நீங்கள் செய்யும் செயல்களை கவனித்து பாருங்கள் கண்டிப்பாக ஆச்சர்யமான பலன்கள் கிடைக்கும்.
பலன்கள்:
வெள்ளி மோதிரத்தை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்த்தால் இது உங்கள் அழகை அதிகரிக்கும், உங்களது ஆளுமை திறனை வியாழன் மற்றும் சந்திரன் கோள்களோடு இணைக்கும், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உங்களை எப்பவும் கூலாக சந்தோஷமாக வைத்திருக்கும்.
மூட்டு பாதிப்புகள் :
உங்கள் ஜாதகத்தில் சந்திரன் வலுவிழந்து காணப்பட்டால் உங்கள் அறிவுப்பூர்வமான எண்ணங்கள் பலவீனமடைந்து மற்றும் நோய்கள் காணப்படும்.ஆனால் இந்த வெள்ளி மோதிரம் சந்திரன் பார்வைக்கு வலுக்கொடுத்து பலம் தந்து உங்கள் இருமல், சளி, மூட்டு வலிகள் மற்ற எல்லா மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இவற்றையெல்லாம் சரியாக்கும்.
வெள்ளி செயின்:
நீங்கள் மோதிரமாக அணிய விருப்பம் இல்லையென்றால் வெள்ளி செயினாக அணிந்து கொள்ளலாம். இதுவும் வெள்ளி மோதிரத்தை போன்ற எல்லா நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கும். நீங்கள் இதை செயினாக அணிவதால் உங்கள் தொண்டை சக்கரத்திற்கு வலுக்கொடுத்து தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குரல் பிரச்சினைகள் போன்றவற்றை சரிசெய்யும்.
வெள்ளி பொருட்கள்:
வெள்ளி மோதிரம் மற்றும் செயின்களை போல வெள்ளி ஸ்பூன், கரண்டி போன்றவைகளும் முக்கியமானவை. வெள்ளி பெளலில் தேன் இட்டு அதை வெள்ளி ஸ்பூனால் பருகினால் சலதோஷம், சைனஸ் போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
நோய் எதிர்ப்பு செல்கள் :
வெள்ளி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கிறது. எனவே நோய்கள் நடமாடும் இந்த நவீன உலகத்தில் இந்த வெள்ளி உலோகம் மிகவும் இன்றியமையாதது ஆகும். இதனால் ஆரோக்கியமான வாழ்வு பெற்று வாழவும் முடியும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 24 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும் 24 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show




நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 23 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும் 23 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show






நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 22 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும் 22 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show







நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 21 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும் 21 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show






நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 20 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும் 20 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show







நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 19 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும் 19 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show








நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 18 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும் 18 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show




நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 1712 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும் 1712 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show







நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

பரிகாரமும் பலன்களும் 16 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer

பரிகாரமும் பலன்களும் 16 12 2017 1Yes Tv - Dr. Sri Kumar Astrologer - Best Astrologer in Chennai - 1 Yes Tv Astrology Show





நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com