Monday 8 January 2018

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா , நேரம் வரும் வரை காத்திருந்து பாரு ராஜா

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா , நேரம் வரும் வரை காத்திருந்து பாரு ராஜா இந்த பாட்டை கேட்கும் பொழுது மனதில் உற்சாகம் உண்டாகும் ஆனா அதன் உள் அர்த்தத்தை உணரும் பொழுது கொஞ்சம் மனசு நெருடலாகத்தான் இருக்கும் ,ஆமாங்க நேரம் வரும் வரை காத்திருக்கணுமா ? அப்புடின்னு நீங்க கேட்கிறது எனக்கு புரிகிறது .

ஜோதிட ரீதியாக சில உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கு , இன்று சிலவற்றை உங்களிடம் பகிர்வோம் .
ரொம்ப பேரு நல்லா உழைக்கிறோம் ஆனா கையில காசு தங்க மாட்டேன் என்று சொல்வதை கேட்டுருப்போம் ,காரணம் அவர்களின் தொழில் வழி லாபம் குறைவாக இருக்கும் .
ஜோதிடத்தில் பதினொன்றாம் பாவகம் லாப ஸ்தானம். அதை இயக்கினால் லாபம் கிடைக்கும் . சரி லாப ஸ்தானத்தை இயங்கச் செய்ய முடியுமா ,கண்டிப்பாக முடியும் , வேண்டுமானால் முயன்று பாருங்கள் . அதாவது உங்களுடைய மனைவி ஏழாம் பாவகம் , அவருடைய தங்கை ( அதாங்க கொழுந்தியா )ஒன்பதாம் பாவகம் . சரி கொலுந்தியாவின் வின் கை உங்களுக்கு பதினொன்றாம் பாவகம் ஆகும் .
கொழுந்தியாள் கைகளில் வளையல்களை வாங்கி மாட்டுங்கள் அவருடைய கைகள் இயங்க இயங்க உங்களுடைய பதினொன்றாம் பாவகம் இயங்கும் .லாபம் மேலோங்கும் .(யாரோ ஒருத்தர் கண்ணாடி வளையலா இல்லை தங்க வலையால என்று கேட்பது புரிகிறது . அது உங்க விருப்பம் சார், நான் சொல்ல ஒன்னும் இல்ல .நல்ல ஆர்வம் . )
அண்ணே கொழுந்தியா கையில வலையல மாட்டின பதினொன்றாம் பாவகம் இயங்கும் ஆனா ஏழாம் பாவகம் (அதாங்க உங்க மனைவி ) விட்டை விட்டு அம்மா வீட்டுக்கு போயிடும் (நாலாம் பாவகத்து போயிடும் )
.இப்ப என்ன பன்றது ?
எப்படியாவது உங்களை கரை ஏத்தலாமுன்னு பார்த்த ஒன்னும் முடியலயே ? .
சரிவிடுங்க அடுத்து ஒரு ஐடியா தாரேன் , ஒன்பதாம் பாவகம் கொளுந்தியாவை மட்டுமல்ல ஆன்மிகத்தையும் குறிக்கும் ஏன் பூசாரியையும் குறிக்கும் ,அதனால கோவில் குருக்கள் கையில் ஒரு மணி வாங்கி கொடுத்து பூஜை நேரங்களில் அடிக்க உங்கள் பதினொன்றாம் பாவகம் இயங்கும் லாபம் மேலோங்கும் .

சார் நீங்க சொன்னது இந்துக்களுக்கு, இது ஒத்துவரும் நாங்க என்ன செய்யுறது ,அப்புடின்னு கேட்கின்ற சகோதரர்களுக்கு , அய்யா மற்ற மதத்தினர் ஜெபமாலை வாங்கி கொடுங்கள் .இல்லேன்னா உங்களுடைய ஆசிரியர் அல்லது குருவுக்கு வாக்கிங் ஸ்டிக் வாங்கி கொடுங்க . இப்போ உங்க பதினொன்றாம் பாவகம் இயங்கும் .
பத்தாம் வீட்டு அதிபன் பனிரெண்டில் இருந்தால் ஜாதகர் நல்ல வாக்கிங் போனால் ,காலில் மறைந்து கிடக்கும் பத்தாம் அதிபன் துயில் நீங்கி தொழில் செய்வான் .
பத்தாம் வீட்டு அதிபன் லக்னத்தில் இருந்தால் மூளையை பயன்படுத்தினால் தொழில் மேலோங்கும் 

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment