Thursday 27 April 2017

திருமணம் நடைபெற பரிகாரங்கள்,விரதம்,வழிபாடு

திருமணம் நடைபெற பரிகாரங்கள்,விரதம்,வழிபாடு

விரத பலன்;
ஒரு வீட்டில் கணவன் விரதமிருந்து வழிபட்டால் கணவனுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். ஆனால் மனைவி விரதமிருந்து வழிபட்டால் மனைவிக்கு மட்டுமல்லாமல் கணவனுக்கும், குழந்தைக்கும் கூட நற்பலன்கள் கிடைக்கிறது.




குடும்ப பாதிப்பு, கஷ்டங்கள்; தினமும் வீட்டில் [அல்லது] உள்ளூர் பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட பாதிப்பு நீங்கும்.
. மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க; அஷ்டமி, நவமி, கரிநாள், ராகு காலம், எமகண்டம் தவிர்த்து, புதன், வியாழக்கிழமைகளில் அமிர்த யோகம், சித்தயோகக் காலத்தில் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது எதிர்காலக் கல்விக்கு நல்லது.
வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் விளகேற்றி வெள்ளை சிகப்பு அரளிப்பூ போட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தம்பதியரின் பெயர், ஜெனம நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் தம்பதியர் இருவரும் ஒற்றுமையாக அன்னியோன்னிய நேசத்துடன் விளங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
நிரந்தர நல்ல வேலை கிடைக்க செவ்வாய்க்கு அதிபதி முருகனை நம்பிக்கையுடன் தினமும் வழிபட்டு வந்தால் 3 மாதத்திற்குள் வேலை கிடைக்கும்.
திருமணம் தாமதமாகி களத்திர தோசத்திற்குள்ளான பெணகள் செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணி முதல் 4.30. மணி ராகு காலத்தில் துர்க்கை அம்மன் சன்னதியில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றுவதோடு நவகிரகங்களை ஒனபது முறை சுற்றினால் திருமணம் விரைவில் நடைபெறும்.
வியாபாரிகள் தங்களது கடைக்கு நல்லவர், கெட்டவர் வந்து போவதால் திருஷ்டியைப் போக்க இரவில் கடையை மூடும் பொழுது சூடம் ஏற்ற வேண்டும். எலுமிச்சம் பழம் வெட்டி குங்கும்ம் தோய்த்து கடையச்சுற்றி கடையின் நான்கு திசைகளிலும் போட்டால் வியாபாரம் நன்கு விருத்தியாகும்.
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கைகூடும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலத்தில் [4.30 மணி முதல் 6 மணி வரை] உள்ளூர் ஆலயத்திலுள்ள கால பைரவருக்கு செவ்வரளி மாலை, நெய் தீபம் 27 வாரம் ஏற்றி வர திருமணம் நடக்கும். 48 வது வாரம் நெய் தீபம் ஏற்ற எதிரி தவிடுபொடி, பில்லி, சூன்யம், சனி, நாக தோசம் மரண பயம் நீங்கும். காயத்ரி சொல்லி வழிபடுவது சிறப்பு தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு மிகச்சிறப்பு.
திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சையை சொருகினால் திருஷ்டி செய்வினை நீங்கும்.
விநாயகருக்கும், சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான மரம் வன்னி மரம். வன்னிமரத்தின் கீழ் உள்ள விநாயகரை வழிபடுவதால் சனி, ராகு, கேது, தெசாபுத்தி பாதிப்பு, ஆயுள் விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறல், பொன்பொருள் சேர்க்கை ஏற்றமான வாழ்வு அமையும்.
ஸ்ரீ மந்நாராயண்னின் அம்சமாகப் போற்றபடுவது அரச மரம். அரச மரத்தின் வேரில் பிரம்மாவும் மத்தியில் விஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் குடி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து தெய்வங்களும், உப தேவதைகளும் அரச மரத்தின் பழங்களில் வாழ்வுதாயும் புராணங்களில் கூறப்படுகிறது.
திங்கடகிழமையும், அமாவாசயும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சணம் செய்வது மகா புண்ணியம் தரும். நீண்ட ஆயுள், பிள்ளைப்பேறு, நோயிலிருந்து நிவாரணம், வைகுண்ட பிராப்தி இவை கண்டிப்பாகக் கிட்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

புத்ர தோசத்திற்கு சக்தியுள்ள பரிகாரம்; வியாழக்கிழமைகளில் ஒரு வேளை உபவாசமும் மாலையில் திருக்கோவிலிலுள்ள தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமும் தொடர்ந்து ஏற்றிவர விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும். மாதவிடாய் சமயத்தில் இந்த விரதத்தை அனுஷ்டிக்காமல் வேறு யார் மூலமாவது நெய் தீபம் ஏற்றி வர வேண்டும், நம்பிக்கை அவசியம்.
தடைப்பட்ட திருமணம் நடைபெற
ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் சிவன் கோயில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சார்த்தி அபிசேகம் செய்து வழிபட வேண்டும்..பிரதோச நாளில் நந்திபகவானுக்கு பால்,தயிர் வாங்கி அபிசேகத்துக்கு கொடுக்க வேண்டும்.விரைவில் திருமணம் நடைபெறும்..!!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment