Tuesday 22 August 2017

நல்ல வரன் அமைய வேண்டுமா?

நல்ல வரன் அமைய வேண்டுமா?
நாம் அனைவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமானது திருமணம். ஆனால் ஒரு சிலருக்கு நல்ல வரன் அமையமால் திருமணம் தள்ளி தள்ளி போகும். இதனால் அவர்கள் மனமுடைந்து போவார்கள். நாம் விரும்பியவரை திருமணம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி பலர் இருப்பார்கள். திருமணம் தாமதமாக நடைபெறாமல் இருக்க பரிகாரம் மற்றும் விரும்பியவரை மணக்க/நல்ல வரன் அமைய திருமணம் தாமதமில்லாமல் நடக்க பரிகாரங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.
பரிகாரம் :
வெள்ளியன்று வெள்ளை நிற ஆடைகள் அணியவும்.
வீட்டில் தென் மேற்கு பகுதியில் மண் அகலில் 43 நாட்கள் நெய் விளக்கேற்றி வரவும்.
ஒரு வெற்றிலையில் விரும்பியவரின் பெயர் எழுதி கடவுளிடம் வேண்டி பின்பு அதை தேன் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
பெண்கள் பச்சை நிற வளையல்கள் அணியவும்.
ஒரு சிறு மண் சட்டியில் காளான்கள் வாங்கி நிரப்பி அதை ஏதேனும் தர்கா, மசூதி அல்லது கோவில், சர்ச்சுகளில் தானம் செய்யவும்.
திருமணம் முடியும் வரை இரவில் பால் அருந்தாமல் இருக்கவும்.
தொடர்ந்து 16 திங்கள் கிழமைகள் விரதம் இருந்து வரலாம்.
வீட்டில் துளசி செடி வைத்து அதற்கு தினமும் சிறிது குங்குமப்பூ சேர்த்த நீர் விட்டு வரவும்.
வெள்ளியில் செய்த சிறு உருண்டைகள் உடன் வைத்திருக்கவும். அல்லது சிறிய உருண்டை வடிவ வெள்ளியை கழுத்திலும் அணியலாம்.
மந்திரம் :
திங்கட்பகவின்மணம் நாறும்
சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்திய வாஎண்
ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து
மோதரங் கக்கடலுள்
வெங்கட் பணியணை மேல் துயில்
கூரும் விழுப்பொருளே.
இந்த மந்திரத்தினை சொல்லி இறைவனை வழிபட விரைவில் திருமணம் நடைபெறும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment