Saturday 15 July 2017

பிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு !!!

பிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு !!!


நமக்கெல்லாம் நோய் வந்தால் மருத்துவர்களையும், மருந்துகளையும் நம்புகின்ற அளவுக்கு நாமெல்லாம் பிரார்த்தனைகளை நம்புவதில்லை. ஆனால் பிரார்த்தனை எவ்வளவு வலுவானது என்பதற்குப் பாம்பன் சுவாமிகளது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவமே சான்று. 1923ஆம் வருடம் டிசம்பர் மாதம் 27ம் திகதி வியாழக்கிழமை சுவாமிகள் தெருவிலே நடந்துசென்று கொண்டிருந்தார். வேகமாக வந்த குதிரை வண்டி ஒன்றின் சக்கரம் அவரது காலில் ஏறியதால் கணுக்கால் எலும்பு முறிந்தது. உடனே சுவாமிகளை மருததுவ மனையில் சேர்த்த பக்தர்கள்..,நமக்கெல்லாம் நோய் வந்தால் மருத்துவர்களையும், மருந்துகளையும் நம்புகின்ற அளவுக்கு நாமெல்லாம் பிரார்த்தனைகளை நம்புவதில்லை. ஆனால் பிரார்த்தனை எவ்வளவு வலுவானது என்பதற்குப் பாம்பன் சுவாமிகளது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவமே சான்று. 1923ஆம் வருடம் டிசம்பர் மாதம் 27ம் திகதி வியாழக்கிழமை சுவாமிகள் தெருவிலே நடந்துசென்று கொண்டிருந்தார். வேகமாக வந்த குதிரை வண்டி ஒன்றின் சக்கரம் அவரது காலில் ஏறியதால் கணுக்கால் எலும்பு முறிந்தது. உடனே சுவாமிகளை மருததுவ மனையில் சேர்த்த பக்தர்கள் , அவரது பக்கத்திலே இருந்து ஷண்முக கவசத்தைப் பாராயணம் செய்தபடி இருந்தனர்.
’ஏரகத்தேவன் என்தான் இரு முழங்காலும் காக்க
சீருடைக் கணுக்கால் தன்னைச் சீரலை வைத்தே காக்க’
என்ற வரிகளை மீண்டும் மீண்டும் பக்தியுடன் உள்ளமுருகப் பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது சுவாமிகளது கால்கள் அருகினிலே ஜொலிஜொலித்துக் கொண்டு இரண்டு வேல்கள் இருப்பதை சுவாமிகளும் ஒருசில பக்தர்களும் கண்டு மெய் சிலிரத்துப் போனார்களாம். அங்கே இரண்டு மயில்கள் நிர்பதைக் கண்ட பாம்பன் சுவாமிகள் அந்த மயில்களின் கால்கள் நிலத்தில் படாமலிருப்பதைக் கண்டு ஆனந்தத்தில் திழைத்தார். சிகிச்சை முற்றாக முடிவடையும் முன்னரே சுவாமிகளின் கால்களில் முறிந்த எலும்புகள் ஒன்றாகச் சேர்ந்ததை மருத்துவர்கள் ஒரு அதிசயமாகவே கருதினார்கள். மயில்களைத் தான் கண்ட அந்த நாளை ’மயூரவாகன சேவனம்’ என்று பெயரிட்டு தனது வாழ்நாள் முழுவதும் கொண்டாடி வந்தார் பாம்மன் சுவாமிகள்.
நோயைத் தீர்க்க மருந்து மட்டும் போதாது. மந்திரமும் தேவை. அதற்காக மந்திரம் மட்டுமே போதும் என்று பொருள் கொள்ளக்கூடாது. மந்திரத்தால் கிடைக்கும் இறையருளால் நோய்க்குக் காரணமான பாவம் தீரும். நாம் உட்கொள்ளும் மருந்தால் நோய் குணமாகும். 


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment