Wednesday 7 June 2017

*கொல்லிமலை ரகசியம்*

*கொல்லிமலை ரகசியம்*.
பல ஆண்டுகளுக்கு பிறகு 18 சித்தர்களின் தாய் வீடான கொல்லிமலை அரபளீஸ்வரர் ஆலயத்தை புனரமைக்க தொடங்கி உள்ளோம் மகா சித்தர்கள் டிரஸ்ட் அன்பர்களினால்... மே மாதம் 7ம் திகதி கும்பாபிஷேகம்.... அனைவரும் இணைவோம்...




கொல்லிமலை, இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீட்டர் உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.
பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கி.பி. 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான்.
தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த மலைகளில் கொல்லிமலையும் ஒன்று. நாமக்கல் அருகிலுள்ள கொல்லிமலையில்தான் எல்லா சித்தர்களும் யோகம், ஞானம், மருத்துவம் போன்ற அரிய கலைகளை சிவபெருமான் தலைமையில் நந்தி தேவரிடம் பயிற்சி எடுத்தனர் என்பர்.
இந்த மலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் உள்ளன. இதனால் கொல்லி மலையை மூலிகை மலை எனவும் அழைப்பார்கள்.
அடுக்கடுக்காக அமைந்திருக்கும் இந்த மலையின் நடுவில் ஒரு அருவி பாய்ந்தோடுகிறது. இந்த அருவி எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்தக் கொல்லிமலையில்தான் 18 சித்தர்களும் சிவபெருமானை குருவாக ஏற்றுச் செய்த குருமுப்பு என்ற மருந்தைத் தயாரித்தார்கள்.
இந்த முப்பு மருந்து நரை, திரை, மூப்பை மாற்றும் வல்லமை பெற்றது. இந்தக் குருமுப்பு மருந்தின் ஒரு பகுதியை 18 சித்தர்களும் தங்கள் மருத்துவப் பணிக்கு எடுத்துக்கொண்டு மீதியைக் கொல்லிமலையிலேயே அரங்கப்பம்மன் கோயில் அருகில் சித்தர்களின் தவசக்தியால் ஒரு பெரும் பள்ளத்தில் வைத்து அதன்மேல் பெரும் பாறையை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கான அடையாளமாக அந்தக் கோயிலின் முன் குறியிடப்பட்டிருக்கிறது. அத்தோடு மருந்துக்குக் காவலாக நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்களைக் காவல் இருக்கப் பணித்தனர்.
அதன் அடையாளமாகக் கிழக்குப் பக்கம் கருப்பண்ண சாமி சிலையும் மேற்குப்பக்கம் மாசி சின்னண்ணசாமியும், தெற்குப் பக்கம் கொல்லி யம்பாவையும், இதற்கு நடுவில் எட்டுக்கை காளியும் இருந்து காவல் இருக்கின்றனர். இந்தத் தெய்வங்களை இன்றும் மக்கள் பக்தியுடன் வழிபடுகின்றனர்.
கொல்லிமலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருந்தாலும் குறிப்பாக, சிறப்பான மூலிகையான முடவாட்டுக்கால் அதிகம் தென்படுகின்றன. இந்த மூலிகை மண்ணில் வளராது. பாறைகளின் மேலும், மரங்களின் மேலும் படரும் ஒட்டு இனத்தைச் சேர்ந்தது. அதன் இலையே காய்ந்து சுருண்டு அதன்மேலே கவசம்போல் ஒட்டிக் கொள்ளும். இந்த மூலிகை காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது.
முடவாட்டுக்கால் மூலிகையை மனிதனின் கருவிலிருந்து இறுதிவரை மருந் தாகப் பயன்படுத்தலாம். இதை மருந்தாகப் பயன்படுத்த பக்குவம் தேவை. கருப்பை வளர்ச்சி முதல் சிறுநீரகம் சிறுத்துப் போதல், உள்ளுறுப்புகள் சுருங்காமல் இருக்கச் செய்யும், புற்றுநோயைப் போக்கும். அதோடு எல்லாவிதமான வாதம், பித்தம், சிலோத்தும நோய்களைச் சமநிலைப்படுத்தி உடலைப் பக்குவப்படுத்தும்.
முடவாட்டுக்கால் மூலிகையைப் பதப்படுத்தி மருந்தாகச் செய்யத் தெரியாத வர்கள் இதை சூப் செய்து சாப்பிடலாம். முடவாட்டுக்கால் மேல்தோலைச் சீவி பொடிப் பொடியாக நறுக்கிச் சிறிது மஞ்சள் பொடியும் உப்பும் போட்டு வேகவைத்து பிறகு வடிகட்டி அந்த மூலிகைச் சாறை (சூப்பாக) தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் அனைத்து நோய்களும் நீங்கிவிடும். ராஜ உருப்புகள் பலப்பட்டு ஆயுள் விருத்தியாகும்.
கொல்லிமலையில் 18 சித்தர்கள் வாழ்ந்து தவம் செய்துள்ளனர் என்பதற்கு அடையாளமாக கோரக்கர் குகை, ஔவையார் குகை, பாம்பாட்டிச் சித்தர் குகை, கோரக்கர் யாக குண்டம் போன்ற பல சித்தர்கள் வாழ்ந்த அடையாள இடங்கள் உள்ளன.
கோரக்கர் குண்டத்தில் காடை சம்பா அரிசி, கருங்குருவை அரிசியில் நெய் பொங்கல் வைத்து கரும்பு, வெல்லம் வைத்துப் படைத்து பக்தியோடு யாகம் செய்து பிறகு சிறிது தூரத்தில் உள்ள கூட்டாற்று மூலையில் தங்கினால் இன்றும் அன்று இரவு சித்தர்கள் ஜோதி ரூபத்தில் காட்சி தருவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
இதை நான் ஓலைச்சுவடியில் பார்த்து முறையாக பூஜை செய்து கண்கூடாகக் கண்டேன்.
இன்றும் கொல்லி தலையில் அரங்கநாயகி உடனுறை அறப்பலீஸ்வரர் ஆலயத்தில் தினசரி 18 சித்தர்களும் காலை நேரத்தில் ஜோதி வடிவாக வந்து சிவனை வணங்கிச் செல்கின்றனர்.
இதை உண்மையான பக்தியோடு வணங்குபவர்கள் கண்களுக்குத்தான் ஜோதி வடிவான சித்தர்கள் காட்சி தருவார்கள்.
கொல்லிமலையில் பல இறையதிசயங்கள் அடங்கியுள்ளன. இதை முழுமை யாக அறிந்தவர், தெரிந்தவர் இல்லை.
கொல்லிமலையின் இறையதிசயத்தை முழுமையாக அறிந்து உரைக்க மனித மூளையால் முடியாது.
கொல்லிமலையில் 80 கிராமங்கள் உள்ளன.

தமிழ் மக்களான இவர்கள் விவசாயத்தை நம்பியே இருக்கின்றார்கள்.
கொல்லிமலையைச் சுற்றி 8 கோயில்கள் உள்ளன. முனிவர்கள் தங்கள் தவத்தினை அமைதியான இடத்தில் செய்ய விரும்பி கொல்லி மலையைத் தேர்ந் தெடுத்ததாகவும், அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்த தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்குமாறு கொல்லிப் பாவையிடம் வேண்டியதாகவும் கதைகள் உள்ளன.
அதற்கிணங்க கொல்லிப் பாவை தனது வசியப் புன்னகையால் தீய சக்திகளை விரட்டியதாகவும் கூறுகின்றனர். கொல்லி மலையில், கொல்லிப் பாவைக்கு இன்றும் ஒரு கோவில் உள்ளது.
மலையின் தென் திசையில் உள்ள கொல்லிப்பாவை கோயிலை இதுவரை யாரும் சென்று பார்த்ததில்லை என்கிறார்கள். காரணம் கடும் காட்டைத் தாண்டிச் செல்லவேண்டும். அந்தக் காட்டை நோக்கி நடக்கும்போது மிகப் பெரிய கொடிய விஷம் கொண்ட கருவண்டுகள் நம்மைத் தாக்கும். இதனாலேயே யாரும் அங்கு செல்வதில்லை.

நாமக்கல் நகரிலிருந்து 55 கி.மீ. தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது.
கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களிலி ருந்து பேருந்து வசதி உள்ளது.
மலைப்பாதையின் தூரம் 26 கி.மீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும்.
சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுநர் களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார் மற்றும் வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாகச் செல்வது நன்று.
இறையதிசயமும் வீரியமான மூலிகைகளும் நிறைந்த கொல்லிமலை நீர் வளமும் நில வளமும் நிறைந்தது.
ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த கொல்லிமலையில் இன்னும் பல அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. சித்தர்கள் இங்கு நிகழ்த்திய அற்புதங்களையும் வீரியமான மூலிகைகளின் ரகசியங்களையும் அடுத்தடுத்துப் பார்ப்போம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment