புரட்டாசி
மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை ஆகும். பித்ருக்களின் ஆராதனைக்கு
வடமொழியில் “மஹாளயம்” என்று பெயர். புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை
முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளய பட்சமாகும். மகிமை
மிக்க மஹாளயம் புண்ணிய காலமாகவும், மறைந்த முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாகவும்
கருதப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்த
நாட்களில் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது
ஐதீகம்.
வாழ்வியல் தர்மம்:-
வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச்
செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது. இம்முறை
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து பின்பற்றுகிற முறை ஆகும். இது வாழ்க்கையில்
கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் தர்மங்களாக வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
பித்ருக்களின் வகைகள்:-
பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள்
மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ரு வர்க்கம் எனப்படுவார்கள்.
அம்மா
வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள்.
சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீக் வர்க்கம் எனப்படுவார்கள்.
இவர்களை நினனவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
மகாளய
சிரார்த்தம்:-
தாய்,
தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால்
போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த
முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான்
சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.
குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதாசி அன்று மகாளய
சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.
செய்ய வேண்டிய நாட்கள்:-
ஒரு
வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னுற்று
ஆறு நாட்கள்.
இவைகளில்
14 மன்வாதி நாட்கள்,
12 யுகாதி நாட்கள்,
12 அமாவாசை,
16 மகாளய பட்சம்,
12 வ்யதீபாதம்,
12 வைத்ருதி,
4 அஷ்டகா,
4 அன்வஷ்டகா,
4 பூர்வேத்யு நாட்கள்.
இந்த
நாட்களில் செய்யப்படும் தர்ப்பணதால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இதில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு நாள் மகாளய அமாவாசை
மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக
இருக்கும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம்
செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய
வேண்டும்.
முறைகள்:-
·
மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும்
மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.
·
மகாளய
அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
·
ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகள் மற்றும் ஜென்ம
நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
·
தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக
பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
·
தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும்
நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிட
கூடாது.
·
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர்
கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.
·
நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய
பித்ருக்களுக்கு, மகாளயபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை
திரவியங்கள் போன்றவை வேண்டாம்.
·
சாஸ்திரப்படி சிரார்த்த காரியங்கள் செய்பவர்
திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு உண்ணக் கூடாது.
·
தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும்
முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும்
ஹோமங்களிலும், ஆலய நிகழ்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து
கொள்ளக்கூடாது.
·
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய
நாளன்று, தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை
நிறுத்தி வைத்து விட்டு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய
தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்ய வேண்டும்.
·
சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும்
நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம
சாஸ்திரங்கள் கூறுகின்றன.
·
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த
தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டுருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
·
நமது பித்ருகளிடத்தில் சிரார்த்தத்தை
சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில்
வாங்கித் தருவதாகவும், பிராத்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால்
நிச்சியம் உங்கள் விருப்பம் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.
·
மகளாய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின்
படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.
சிரார்த்த உணவு சென்றடையுமா?
ஒரே நாளில்
ஏராளமான பித்ருகளுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும் போது சிரார்த்த
உணவு அவரவர்களின் பித்ருகளுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற
சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின்
கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும் போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர்
கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.
செய்ய வேண்டிய இடங்கள்:-
ராமேஸ்வரம்,
திருவாலங்காடு, திருவள்ளூர், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி,
திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி திருநள்ளாறு ஆகிய இடங்ககளில் தர்ப்பணம்
செய்வது மிக சிறந்தது.
பலன்கள்:-
·
மகாளய
அமாவாசையில் பித்ருக்களை வழிபடவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை,
நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபூரணம் கூறியுள்ளது.
·
தற்கொலை
செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டுருக்கலாம். அவர்களுக்குரிய
தர்ப்பணம் செய்யும் போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.
·
துவாதசி பன்னிரண்டாம் நாளன்று பித்ரு பூஜை
செய்பவன் சொர்ண லாபம் பெறுவான் என நம்பப்படுகிறது.
·
மகாளாய
அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு
தாத்தாவுக்கும் போய் உரிய பலன்களை கொடுக்கும்.
·
பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி
சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களை தரும்.
·
மகாளாய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது
மிக, மிக நல்லது.
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 113/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment