Wednesday 26 April 2017

கடன் தோஷம் நீங்க

கடன் தோஷம் நீங்க

மனித வாழ்வில் பணம் படைத்தவர்கள் நடுத்தரவர்க்கம் எளிய மக்கள் என அனைவரது வாழ்விலும் கடன் தொந்தரவுகள் உள்ளன ஒரு சிலருக்கு வாங்கிய கடனை கொடுக்கும் பாக்கியம் உள்ளது சிலருக்கு கடனே வாழ்க்கையாக அமைந்து முடிவில் பிணியை கொடுத்து வாழ்க்கையை முடித்துவிடுகிறது கடன்பட்ட நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் இராவணன் என்று கடன்பட்டவர்களின் மனவேதனை குறித்துசொல்வார்கள் இப்படிப்பட்ட கடன் தொந்தரவுகள் எதனால் ஏற்படுகிறது என்றால் ஒருவர் பிறக்கும் போது நவகிரகங்கள் எந்த ராசியில் எப்படி அமர்கிறதோ அதனை வைத்துதான் கடன் வாழ்க்கை கடன்படாத வாழ்க்கை ஆகியவை அமைகின்றது இந்த நிலைகள் ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினைகள் தீவினைகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது
லக்னத்துக்கு 1முதல்12 வரை உள்ள கிரகங்கள் 6ஆவது வீட்டில் அமர்வதால் ஏற்படும் கடன் தொல்லைகளை கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் படிப்படியாக்க் குளிகன் நேரத்தில் கடனை செலுத்திவரும் காலத்தை கடன் இல்லாத காலமாக நீங்களே அமைத்து கொள்ளலாம்



பரிகாரம்-1
சென்ற பிறவியில் செய்த தவறுகளால் இந்தப் பிறவியில் ஏற்பட்ட கடன்தொல்லையிலிருந்து மீள மூன்று பெளர்ணமி நாட்களில் அவரவர் குலதெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன்தொல்லை படிப்படியாக குறையும் கடனை அடைத்துவிடலாம்
பரிகாரம்-2
குலதெய்வம் அருகில் இல்லாமல் வெகுதூரத்தில் வசிப்பவர்கள் அவர்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை வைத்து அல்லது குலதெய்வம் உள்ள ஊர் திசையை நோக்கி ஐந்துமுக நெய்விளக்கு ஏற்றி ஒன்பது பெளர்ணமி நாட்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் கடன்சுமை குறையும் 90 நாட்களுக்குள் கடனை அடைத்துவிடலாம் உஙகளுக்குவரவேண்டிய பாக்கி இருந்தாலும் வசூலாகிவிடும்
பரிகாரம்-3
ஒன்பது பெளர்ணமி நாட்கள் குலதெய்வப்பூஜை செய்வதோடு படித்தவர்களாக இருந்தால் கீழ்கண்ட சுலோகத்தை தினசரி காலையில் ஒரே நேரத்தில் ஒன்பதுமுறை சொல்லிவழிபட்டு வந்தால் கடன்சுமை படிப்படியாக்க் குறைந்து 90 நாட்களில் பெருமளவு கடனைக்கட்டி நிம்மதி பெறலாம் வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகிவிடும்
கடனை குறைக்கும் லட்சுமி நரசிம்மர் துதி
தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ் தம்ப ஸமுத்பவம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//

லட்சுமி யாலிங்கத வாமாங்கம்
பக்தனாம் வராத யகம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
ஆந்த்ர மலாதாரம் சங்க்
சக்ராப் ஜாயுத் தாரிணம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
ஸ்மரணாத் ஸர்வ பாபக்ணம்
கத்ருஜ விஷநாஸனம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
ஸிம்ஹ நாதனே மஹாதா
தித்தந்தி பயநாஸனம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//

பிரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யேஸ்வர
விதாரணம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
க்ருரக்ரஹை பீடிதானம் பக்தனாம்
அபயப்பிரதம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
வேத வேதாந்த யக்ஞேசம்
ப்ரஹ் மருத்ராதி வந்திகம்/
நமாமி ருண முக்தயே//
ய இதம்படதே நித்யம் ருணமோசன
ஸம்ஹிதம்/
அந்ருணி ஜாயதே ஸத்ய தனம்
சிக்ரம வாப்னுயாத்
பரிகாரம்-4
மேற்கண்ட லட்சுமி நரசிம்மர் துதியை படிப்பு குறைவு காரணமாகச் சொல்லமுடியாமல் உள்ளவர்கள் தினசரிகாலையில் கீழே தரப்பட்டுள்ள வாக்கியத்தை ஒன்பது முறை சொல்லி வணங்கலாம் 90 நாட்கள் சொல்ல வேண்டும் லட்சுமி நரசிம்மரே நான்பட்டகடனை அடைக்கவும் எனக்குவரவேண்டிய தொகை வரவும் அருள்புரிய வேண்டுகிறேன்
பரிகாரம்-5
மேற்கண்ட லட்சுமி நரசிம்மர் வணக்கத்தைச் சொல்வதோடு உங்கள் பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களில் உள்ள நரசிம்மரை 90 நாட்கள் வணங்கிவர அவர் அருளால் கடனை அடைக்க வழிபிறக்கும்
பரிகாரம்-6
உங்களுடைய கடனை திரும்ப செலுத்தும்போது அந்தக்கிழமையில் உள்ள குளிகன் காலத்தில்முதன்முதலில் செலுத்துங்கள் தொடர்ச்சியாக கடனை அடைத்து கடன்சுமையை குறைத்து கொள்வீர்கள்
பரிகாரம்-7
லெட்சுமி நரசிம்மர் துதியை சொல்ல முடியாதவர்கள் அதனை ஒரு டேப்பில் அல்லது உங்கள்போனில் பதிவு செய்து ஒன்பது முறை மனம் ஒன்றி கேளுங்கள் கடன் நிவர்த்தி பெறலாம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment