Monday 22 May 2017

துஷ்ட சக்திகளிடம் இருந்து காக்கும் திசைகட்டு மந்திரம் !


சில தெய்வங்களின் மந்திரங்களை ஜெபிக்கும் போதோ அல்லது சில தெய்வங்களுக்குப் பூஜை செய்யும் பொழுதும் எதிர்பாராத ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு.எனவே பூஜை அல்லது மந்திர ஜபம் செய்யும் முன் விபூதியை கையில் வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை 11 தடவை ஜெபித்து கிழக்கு,தெற்கு,மேற்கு,வடக்கு என்று நான்கு திசைகளிலும் பூமி மற்றும் ஆகாயத்திலும் சிறிது தூவிப் பின்னர் தலை உச்சியிலும்,நெற்றியிலும் இட்டுப் பின் அமர்ந்து பூஜை,ஹோமம்,ஜெபம் செய்ய எந்த தீய சக்தியும் தேவதையும் உங்களுக்குத் தீங்கு செய்ய இயலாது.
ஜோதிடர்களும் குளித்து முடித்து ஜோதிடம் பார்க்க இம்மந்திரத்தை ஜெபித்த பின் ஜோதிடம் பார்க்க வந்திருப்பவர்களை உள்ளே அழைத்துப் பலன் கூறவும். ஏன் என்றால் தீய சக்திகள்,பேய்,பிசாசு,தோஷம்,பில்லி,சூன்யம்,ஏவல் போன்றவற்றால் கஷ்டம் அனுபவிப்பவர்கள் உங்களை நாடி வந்து பலன் கேட்க வரும் பட்சத்தில் அவர்களிடம் உள்ள சக்திகளாலோ,தோஷத்தாலோ உங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.எனவே இதைச் செய்து கொள்ள உங்களுக்கு கவசமாக விளங்கும்.
வளர்பிறையில் உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நாளாகப் பார்த்து 11 நாட்களுக்குத் தினமும் 1008 தடவை ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.பின் மேற்கூறிய படித் தேவையான நேரங்களில் பயன்படுத்திப் பாதுகாப்பாக வாழவும்.
திசைகட்டு மந்திரம்
வஜ்ரக்ரோதாய மகாதண்டாய தச திஷோ பந்த் பந்த் ஹூம் பட் ஸ்வாஹா ||
MANTRA IN ENGLISH:
VAJRAKROTHAAYA MAHAADHANDAAYA DHASA THISO BANTH BANTH
HOOM PAT SWAAAHA

வாழ்கவளமுடன்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment