Wednesday 24 May 2017

துஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அணுகாதிருக்க உடற்கட்டு சுப மந்திரம்

துஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அணுகாதிருக்க உடற்கட்டு சுப மந்திரம்

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை

நம் குடும்பத்தில் அசுப தசா புக்திகள் நடக்கும் சமயம், துஷ்ட சக்திகள் நம்மையோ நம் சந்ததிகளையோ ஆட்கொண்டு ஆட்டிபடைக்கும். அச்சமயங்களிலும் சரி, அவைகளனுகாதிருக்கவும், விடுதலைப் பெறுவதற்கும் உண்டான " உடற்கட்டு சுபமந்திரம் " இம் மந்திரத்தை தாமும் தம் பிள்ளைகளும் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு, விபூதி 1 சிட்டிக்கை எடுத்து கீழ்வரும் மந்திரத்தை மும்முறை சொல்லி நெற்றியில் அணிந்து கொண்டு படுக்கைக்கு சென்றால் மேற்கண்ட துஷ்ட சக்திகள் ஏணையோரையும் அணுகாது.
சுபமந்திரம்
ஓம்சக்தி சிவசக்தி சாமுண்டிபரமேஸ்வரி
ஐயுங்கிலியும் சௌவும் ஆகாயத்தைக் காட்டினேன்,
சௌவுங் கிலியும் ஐயும் பாதாளத்தைக் கட்டினேன்,
எட்டுதிசையும் பதினாறு கோணமும் ஈஸ்வரனைக் கொண்டு கட்டினேன், கண்ணுடன் சிரசைக் கணபதியால் கட்டினேன், கண்டமும் உடலும் கந்தசாமியால் கட்டினேன்
மற்றவை துஷ்டவை மகாதேவனால் கட்டினேன்
என் உடலையும் உயிரையும் உன் உயிராய் கட்டினேன்
என்கட்டே கட்டு என்கட்டு உன் கட்டாக நிற்க சுவாஹ :

என்று சொல்லவும். இதற்கு பூஜாவிதிமுறைகள் ஏதுமில்லை. ஸ்லோகங்கள் போலவே இதுவும்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment