திருஷ்டிக் கண் மை தயாரிக்கும் முறை !!!
கரிசலாங் கண்ணி இலைகளை சிறிது நீர் விட்டு அம்மியில் வைத்து நன்றாக அரைக்க வேண்டும். நவீன மிக்சி, கிரைண்டர்களைத் தவிர்க்கவும். அவ்வாறு அரைத்த விழுதை ஒரு வெள்ளைத் துணியில் இட்டு சாறு பிழிய வேண்டும். அந்த சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மண் சட்டியில் அல்லது வாணலியில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
அப்போது சடசட வென்று எண்ணெய் பொரியும். நீர் முழுவதுமாக ஆவியாகி வெளியேறி விட்டால் எண்ணெயிலிருந்து சப்தம் எழாது. அப்போது எண்ணெயை இறக்கி வைத்து ஆற வைக்க வேண்டும். இதுவே கரிசலாங் கண்ணி தைலம் தயாரிக்கும் எளிய முறையாகும்.
இவ்வாறு தாங்களாக தயாரித்த கரிசலாங்க கண்ணி தைலத்தால் பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், ஆண்கள் புதன், சனிக் கிழமைகளிலும் தலைக்குத் தேய்த்து எண்ணெய்க் குளியல் நிறைவேற்றி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும், தீர்க்கமான கண் பார்வை கிட்டும், கண் கோளாறுகள் அறவே நீங்கும். தோல் நோய்கள் நெருங்காது, இளநரையை தவிர்க்கக் கூடிய எளிய வைத்திய முறை இது. மலச்சிக்கல் ஏற்படாது. ஆயுள் வளரும்.
ஏழரை ஆண்டு சனி, ஜன்ம சனி, அஷ்டம சனி போன்ற சனீஸ்வர பகவான் பீடிப்பால் துன்பம் அனுபவிப்போர் சனீஸ்வர பகவான் தனிச் சன்னதி கொண்டு விளங்கும் திருத்தலங்களில் நல்லெண்ணெயுடன் கரிசலாங்கண்ணி தைலத்தை கலந்து எட்டு தீபங்கள் ஏற்றி வழிபடுதலால் நவகிரகங்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து ஓரளவு நிவாரணம் கிட்டும். அகால மரணங்களைத் தவிர்க்கக் கூடிய அற்புத வழிபாடு இது.
சந்ததி இன்றி தவிப்போரும், பெண் வாரிசுகளை மட்டும் பெற்று நிராதரவாய் வருந்துவோரும், முதுமையில் துணை அற்றோரும் சனி ஹோரை நேரத்தில் அகல் விளக்கில் கரிசலாங்கண்ணி தீபம் ஏற்றி அஸ்தமன சூரிய மூர்த்தி விளங்கும் ஆலயங்களில் வழிபடுதலால் முதுமை சுமையாய் மாறாமல் உரிய பாதுகாப்பை இறைவன் அளிப்பார்.
இந்த தைலத்தால் இறைவனுக்கு விளக்கேற்றி வைக்க வேண்டும். ஒரு கொட்டாங்குச்சியில் (தேங்காய் மூடி) உட்புறம் சுத்தமான பசு வெண்ணெயைத் தடவி அந்த விளக்கு தீபத்தின் மேல் காட்ட வேண்டும். அப்போது தீபத்திலிருந்து எழும் புகை வெண்ணெயின் மேல் படிந்து சிறிது நேரத்தில் வெண்ணெய் கறுத்து விடும்.
இந்த கரிய குழம்பை ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு மையிடுவதற்காக, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளின் மேல் படியும் அனைத்து விதமான திருஷ்டி தோஷங்களையும் களையக் கூடிய சக்தி வாய்ந்த காப்பாகும்.
கரிசலாங் கண்ணி இலைகளை சிறிது நீர் விட்டு அம்மியில் வைத்து நன்றாக அரைக்க வேண்டும். நவீன மிக்சி, கிரைண்டர்களைத் தவிர்க்கவும். அவ்வாறு அரைத்த விழுதை ஒரு வெள்ளைத் துணியில் இட்டு சாறு பிழிய வேண்டும். அந்த சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மண் சட்டியில் அல்லது வாணலியில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
அப்போது சடசட வென்று எண்ணெய் பொரியும். நீர் முழுவதுமாக ஆவியாகி வெளியேறி விட்டால் எண்ணெயிலிருந்து சப்தம் எழாது. அப்போது எண்ணெயை இறக்கி வைத்து ஆற வைக்க வேண்டும். இதுவே கரிசலாங் கண்ணி தைலம் தயாரிக்கும் எளிய முறையாகும்.
இவ்வாறு தாங்களாக தயாரித்த கரிசலாங்க கண்ணி தைலத்தால் பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், ஆண்கள் புதன், சனிக் கிழமைகளிலும் தலைக்குத் தேய்த்து எண்ணெய்க் குளியல் நிறைவேற்றி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும், தீர்க்கமான கண் பார்வை கிட்டும், கண் கோளாறுகள் அறவே நீங்கும். தோல் நோய்கள் நெருங்காது, இளநரையை தவிர்க்கக் கூடிய எளிய வைத்திய முறை இது. மலச்சிக்கல் ஏற்படாது. ஆயுள் வளரும்.
ஏழரை ஆண்டு சனி, ஜன்ம சனி, அஷ்டம சனி போன்ற சனீஸ்வர பகவான் பீடிப்பால் துன்பம் அனுபவிப்போர் சனீஸ்வர பகவான் தனிச் சன்னதி கொண்டு விளங்கும் திருத்தலங்களில் நல்லெண்ணெயுடன் கரிசலாங்கண்ணி தைலத்தை கலந்து எட்டு தீபங்கள் ஏற்றி வழிபடுதலால் நவகிரகங்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து ஓரளவு நிவாரணம் கிட்டும். அகால மரணங்களைத் தவிர்க்கக் கூடிய அற்புத வழிபாடு இது.
சந்ததி இன்றி தவிப்போரும், பெண் வாரிசுகளை மட்டும் பெற்று நிராதரவாய் வருந்துவோரும், முதுமையில் துணை அற்றோரும் சனி ஹோரை நேரத்தில் அகல் விளக்கில் கரிசலாங்கண்ணி தீபம் ஏற்றி அஸ்தமன சூரிய மூர்த்தி விளங்கும் ஆலயங்களில் வழிபடுதலால் முதுமை சுமையாய் மாறாமல் உரிய பாதுகாப்பை இறைவன் அளிப்பார்.
இந்த தைலத்தால் இறைவனுக்கு விளக்கேற்றி வைக்க வேண்டும். ஒரு கொட்டாங்குச்சியில் (தேங்காய் மூடி) உட்புறம் சுத்தமான பசு வெண்ணெயைத் தடவி அந்த விளக்கு தீபத்தின் மேல் காட்ட வேண்டும். அப்போது தீபத்திலிருந்து எழும் புகை வெண்ணெயின் மேல் படிந்து சிறிது நேரத்தில் வெண்ணெய் கறுத்து விடும்.
இந்த கரிய குழம்பை ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு மையிடுவதற்காக, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளின் மேல் படியும் அனைத்து விதமான திருஷ்டி தோஷங்களையும் களையக் கூடிய சக்தி வாய்ந்த காப்பாகும்.
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment