Saturday 22 July 2017

தூபம் என்பது

தூபம் என்பது இறைவழிப்பாட்டின் போது இறைவனை போற்றி செய்து இறைவனை சாந்தப்படுத்துவதர்காக காண்பிக்கப்படும் நறுமணப் புகையே ஆகும்.
பெரும்பாலும் சாம்பிராணி புகைபோடுதல் என்றால் அனைவருக்கும் நன்கு தெரியும்.
இவ்வகை சாம்பிராணி புகை போடுவதால் என்ன நன்மை?

தெரிந்துகொள்ளுங்கள்!
சாம்பிராணியில் இருக்கும் இயற்கை குணமாகப்பட்டது மனிதனை திடப்படுத்தும் திறன் கொண்டது!
மரத்துண்டில் நெருப்பூட்டி சாம்பிராணியை அதனிலிட்டு அதன் புகை காற்றில் கலந்து வருகையில் அதை சுவாசிக்கும் நமது தேகத்தில் எத்தனையோ வித மாற்றங்கள் நிகழும்.

அந்த மாற்றங்களை சொல்லுவதென்றால் தற்போது அதனை விவரிக்க நேரம் இயலாது!
இருப்பினும் சாம்பிராணியைப் போல பல தூப முறைகள் உண்டு. அவைகளை செய்வதினால் உண்டாகும் நன்மையை சுறுக்கமாக உறைக்கிறேன் .
தினமும் தூபமிட்டு தங்கள் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துங்கள்!

#சந்தனதத்தில் தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம். #சாம்பிராணியில் தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். #ஜவ்வாது தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும். #அகிலி தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும். #துகிலி தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும். #தசாங்கம் தூபமிட தரித்தர்யம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும். #துளசி தூபமிட காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும். #தூதுவளை தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும். #வலம்புரிக்காய் தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும். #வெள்ளைகுங்கிலியம் தூபமிட துஷ்ட அவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும். #வெண்கடுகு தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும். #நாய்கடுகு தூபமிட துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர். #கோஷ்டம் தூபமிட நவக்கிரக கோளாறுகள்நீங்கும். #மருதாணிவிதை தூபமிட சூனிய கோளாறுகளை நீக்கும். #கரிசலாங்கன்னி தூபமிட மகான்கள்அருள்கிட்டும். #வேப்பம்பட்டை தூபமிட ஏவலும் பீடையு நீங்கும். #நன்னாரிவேர் தூபமிட இராஜவசியம் உண்டாக்கும். #வெட்டிவேர் தூபமிட சகல காரியங்களும் சித்தியாகும் . #வேப்பஇலைதூள் தூபமிட சகலவித நோய் நிவாரணமாகும். #மருதாணிஇலைதூள் தூபமிட இலட்சுமி கடாட்சம் உண்டாகும். #அருகம்புல்தூள் தூபமிட சகல தோஷமும் நிவாரணமாகும்.
மேலே குறிப்பிட்டுருக்கும் அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்.

ஓம் நமச்சிவாயம் எல்லாம் சிவார்ப்பனம் 

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment