Thursday 14 September 2017

பிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் !!

பிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் !!

அன்பானவர்களே, வணக்கம்.

பிரம்மதீபம் ஏற்றி வழிபடுவோம். அது என்ன பிரம்ம தீபம் ..

விளக்கின் மையப்பகுதியில் சிறு தண்டு இருக்கும் அதில் பருத்திப் பஞ்சு திரி செருகும் ஓட்டை (வழி) இருக்கும், அந்த வழியாக பஞ்சினை நுழைத்து விட்டு அந்த தண்டினை அதற்குரிய இடத்தில் திருகி வைத்து நெய் அல்லது, தேங்காய் எண்ணை அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி நமது அன்றாட வழிபாட்டினை மேற்கொள்வது.

இந்த வகை விளக்கினை பயன்படுத்தும் போது எந்த திசையை நோக்கி விளக்கின் ஜோதி எரிகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை, காரணம் திரி எண்ணை கிண்ணத்தின் நடுவிலிருந்து ஒளிர்வதால் எல்லா திசைகளுக்கும் அதன் ஒளி படர்வதால் சகல பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்கும்.

பித்தளையில் இவ்வகையான விளக்குகள் எல்லா பாத்திரக்கடைகளிலும் தாராளமாக கிடைக்கின்றது.

பிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஆனந்தமும், நிம்மதியும் பெறுங்கள்.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment