Friday 27 October 2017

முருக கடவுள்

தமிழ் கடவுள் முருக பெருமான் பற்றி...



கோவை செம்மொழி மாநாட்டில் திராவிக் கடவுளான சிவனின்மைந்தன் முருகனையும், சிவனை ருத்திரன் எனவும் வழிபட்டிருப்பதைஅறிஞர்கள் வெளியிட்டார்கள். அதைப் பற்றிய தொகுப்பு.
சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரியகடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர் திராவிடர் வணங்கியகடவுள்களாக இருந்தார்கள் என்று ஆய்வில் தெரியவருகிறது, என்று“செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோபர்போலா, சிந்துசமவெளி எழுத்துக்கள் குறித்த ஆய்வு கட்டுரையில்கூறியுள்ளார். கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழிமாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று,தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். பின்லாந்து நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி நாகரிகம்,திராவிடர்களின் நாகரிகம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவருக்குமாநாட்டு முதல் நாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் “செம்மொழி தமிழ்’விருது வழங்கினார். இவர் “சிந்து சமவெளி எழுத்துக்களுக்கானதிராவிட தீர்வு’ என்ற தலைப்பில் 35 பக்கம் ஆங்கிலத்தில் எழுதியஆய்வுக் கட்டுரையை, முதல்வர் கருணாநிதி முன்னிலையில்மாநாட்டில் சமர்ப்பித்தார்.
அவர் தமது ஆய்வு குறித்து பேசியதாவது: சிந்து சமவெளி நாகரிகம்நிலவிய ஹரப்பா பகுதியில், 1870 மற்றும் 1890-ம் ஆண்டுகளுக்குஇடைப்பட்ட காலத்தில், எந்த மொழி என்று அறிதியிட்டு கூறமுடியாத, கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள்கண்டெடுக்கப்பட்டன. மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியாபகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன்அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 2600 -1900என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது. இக்கல்வெட்டு,எழுத்துக்கள் வளைகுடா கடல் வாணிபர்களால் அந்த பகுதிகளுக்குகொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களால் அந்தஎழுத்துக்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது. சிந்துசமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்துவடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டது. ஆனாலும் பாதுகாக்கப்பட்டசில எழுத்து வடிவங்கள் ஆய்வுக்கும், ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்டமொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளேயாகும்,அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26 திராவிட மொழிகள் பேசப்பட்டுவருகின்றன. எனினும், கி.மு. 1100 -600-ம் ஆண்டுகளில், வடமேற்குபகுதியில் காணப்பட்ட இந்தோ-ஆரிய உருவ வடிவஎழுத்துக்களில்,முகம்,பலம், காணா, கியாம்பு ஆகிய திராவிட மொழிஎழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது.
வரலாற்று மொழிகள் வாயிலாக நாம் அறிய முடிவதுஎன்னவென்றால், சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா) திராவிடமொழியைத்தான் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவருகிறது.சிந்து சமவெளி மதங்களை பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள்உதவிக்கு வருகின்றன. போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய“இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுள் வடஇந்தியர்கள்வணங்கிய போர்க்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது.அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகுஅல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன.வேதங்களில் ஸ்கந்தாவுக்கு முன்னோராக குறிப்பிடப்படும் “ருத்ரா’என்னும் கடவுள், பச்சிளங்குழந்தையாக உருவாக்கப்பட்டும்,சமஸ்கிருதத்தில் “குமாரா’ என்றும் அழைக்கப்படுகிறார். முருகனும்,ஸ்கந்தாவும், சிவப்பு நிறம் அல்லது உதிக்கும் சூரியன் எழுத்துவடிவகுறியீடுகளால் குறிப்பிடப்படுகிறார்கள்.
இதன் மூலம் திராவிட கடவுள் முருகன் மற்றும் ஆரிய கடவுள் ருத்ரா-ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள்என்று தெரியவருகிறது. சிந்துசமவெளி நாகரிக காலத்தைய எழுத்துவடிவங்கள் திராவிட மொழியே பின்னணியில் உள்ளதை தெளிவாகிஉறுதியுடன் கூறமுடிகிறது. உருவக எழுத்துக்களின் அர்த்தங்களைகண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள்தேவையில்லை. இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையைபற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும். இவ்வாறு பேராசிரியர்பர்போலோ பேசினார்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment