Saturday 21 October 2017

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..?


ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..?



ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..? அப்படிஎடுத்துக்கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?
முதலில் ஹோமத்தின்போது காசுகளை அதில் போடலாமா, கூடாதாஎன்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஹோமங்கள்பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை,சாந்தி பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் அதில் உள்ளன.வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீகமுறை என்று அழைக்கப்படுகிறது. இந்தவகை ஹோமங்களில்இறைவனை அக்னியில் ஆவாஹனம் செய்வதில்லை.
‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். அக்னி பகவானைதூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.அதாவது, எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச்செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்றுசேர்க்கும் போஸ்ட்மேன் வேலையைத்தான் அக்னி பகவான்செய்கிறார். இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களைமட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.
பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால்மட்டுமே இந்த வகையான ஹோமங்கள் செய்யப்படுகின்றன. ஒருசில இடங்களில் விசேஷமாக அறுகம்புல், வெள்ளை எள், நெல்முதலானவற்றைக் கொண்டும் ஹோமங்களைச் செய்வார்கள். இந்தமுறையில் பூர்ணாஹுதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும்பட்டுத் துணியில் கொப்பரை வைத்து மூட்டை கட்டி ஹோமத்திற்குள்இடுவது இல்லை.


அதே நேரத்தில் ஆகம ரீதியாகவும், சக்தி வழிபாடு ஆன சாக்தமுறைப்படியும் செய்யப்படும் ஹோமங்களில் அக்னியில்இறைவனை ஆவாஹனம் செய்வார்கள். இறைவனே அக்னியின்ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாகஐதீகம். இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப்பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில்சமர்ப்பணம் செய்வார்கள்.
இந்த முறையிலான யாகங்களில் இறுதியில் பட்டுத்துணியில்கொப்பரை முதலானவற்றை மூட்டை கட்டி பூர்ணாஹுதியைச்செய்வார்கள். இந்த முறையில் ஆபரணம் சமர்ப்பயாமி என்றுசொல்லும்போது நம்மால் இயன்றால் தங்கம், வெள்ளி முதலானஎளிதில் உருகி பஸ்மமாகும் உலோகங்களை சமர்ப்பிக்கலாம்.மாறாக எளிதில் உருகாத இரும்பு, நிக்கல் முதலான உலோகங்களைஇடுவது கூடாது.


பூர்ணாஹுதியின்போது மூட்டைக்குள் இரும்பும் நிக்கலும் கலந்தஇந்த சில்லரை காசுகளைப் போடுவது என்பது தவறு. நாம் எந்த ஒருபொருளை யாகத்தில் செலுத்தினாலும் அது நன்றாக எரிந்துசாம்பலாக வேண்டும். அந்த ஹோம பஸ்மத்தினையே நாம்இறைவனின் பிரசாதமாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.ஒருமுறை ஆஹுதியாகக் கொடுத்த பொருளை திரும்ப எடுத்துக்கொள்வது என்பது தவறு. ஆக, இவ்வாறு ஹோமத்திற்குள் காசுபோடுவது என்பது சமீப காலத்தில் உருவான ஒரு பழக்கமே அன்றிசாஸ்திரோக்தமாக ஏற்பட்டது அல்ல.
ஹோமத்தில் போடப்படும் காசுகளை நம் வீட்டினிலும்,அலுவலகத்திலும் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்வதுஅல்லது தரையினில் பள்ளம் வெட்டி அதற்குள் புதைத்து வைப்பதுபோன்ற செய்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே. ஒருமுறைஇறைவனுக்கு ஆஹுதியாகக் கொடுத்ததை திரும்ப எடுக்கக்கூடாதுஎன்பதால் ஹோமத்தில் இடப்பட்ட காசுகளை எடுப்பதைத் தவிர்ப்பதுநல்லது. இன்னமும் ஒரு படி சரியாகச் சொல்ல வேண்டும் என்றால்ஹோமத்தில் காசுகளைப் போடுவதையே தவிர்ப்பது மிக மிக நல்லது.அப்படி தெரியாமல் போட்டிருந்தாலும் அதனை எடுத்து வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இறைவனுக்கு ஆஹுதியாகஅக்னியில் அளித்ததை திரும்பவும் எடுத்துக்கொண்டதுபோல்ஆகிவிடும் நம் செயல். ஹோமப் பிரசாதம் என்பது அதில் இருந்துநாம் இட்டுக்கொள்ளும் ரக்ஷையும், அந்த சாம்பலுமே ஆகும்.ஹோமகுண்டத்தில் இருந்து எடுத்து வடிகட்டிய சாம்பலை தினமும்நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். அதனையே வாயிற்படியில்மஞ்சள்துணியில் கட்டியும் வைக்கலாம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment