Saturday 7 October 2017

ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள்

ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள்
------------------------------------------------------------------ 
பல அரிய பெரிய ஜோதிட மேதைகள் சிரோமணிகள் பூஷணர்கள் கூறி வந்த
பலன்களெல்லாம் தலை கீழாக மாறி பல
னளித்து வந்ததை நாம் பார்க்காமலில்லை.
என்னதான் ஜாதக கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பலன்சொல்
லும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் பலர். எனவே ஜோதிட நூல்களை படித்தால் மட்டும் போதாது.அனுபவம் பெற வேண்டும்.ஜாதக பலன் சொல்லும் திறமை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை.
ஆழ்ந்த தெய்வபக்தியும் கூறிய நுண்ணறிவும்
வேண்டும். ஸ்ருதி,யுக்தி,அனுபவம்,தெய்வஅருள்,வேண்டும்.பல நாட்கள்அனுபவத்தின் பேரில் சொல்லப்படும்.
ஜோதிடம் ஒருக்கால் முக்கால் பங்கு பலிக்கலாம்.அதுவும் முழுப்பங்கில்லை.
காரணம் ஜோதிடமே அதர்வண வேதத்தில்
தோன்றியது.அதர்வண வேதமோ பழங்கால
முனிவர்களால் புதைக்கப்பட்டு விட்டது. அதில்
சிதறிக் கிடந்த சில நல்முத்துக்களை பொருக்கி எடுத்து கோர்த்து,சத்தியாச்சாரியார் வராஹமிஹிரர்,
போன்றவர்கள், ஒரு தோராயமாக செய்திருக்கிறார்கள்..அவைதான் இன்று பல
ரால் கையாளப்பட்டு வரும் ஜோதிடம்.
சத்தியாச்சாரியாரே,தன் சிஷ்யர்களுக்கு போதிக்கையில்,ஓரளவுக்குத்தான் எடுத்துரைத்திருப்பதாகவும்,கடல்போன்ற ஜோதிட சாஸ்திரத்தை முழுவதும் கரைகாண
முடியாதென்றும் கூறி,சமயத்துக்குத் தக்கவாறு தன் ஞானத்தாலும்,அனுபவத்தாலும் விட்டிருக்கும்
இடங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவும் கூறிஇருப்பதை இன்றைய ஜோதிடர்கள் மறுக்க முடியாது.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment