Saturday 26 August 2017

இராகு கேது பெயர்ச்சி 2017

இராகு கேது பெயர்ச்சி வரும் வியாழக்கிழமை அன்று சுக்ல சதுர்த்தியும்,
உத்திர நட்சத்திரம், சித்த யோகம் கொண்ட நாளில் துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும்,
கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர ராசிக்கும் இடம் பெயர்கின்றார்.
இந்த பெயர்ச்சியின் போது எந்த இராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்ப்போம்.

மேஷ இராசிக்காரர்கள் ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்யலாம்,
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காளி வழிபாடு செய்யலாம்.
சனிக்கிழமையன்று அனுமனுக்கு தீபம் ஏற்றி வழிபட மன நிம்மதி கூடும்.
செவ்வாய் அன்று கேது பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றுதல் நலம் மற்றும்
விநாயகருக்கு அருகம்புல் சாத்துவதால் பிரச்சனைகள் குறையும்.
மிதுன இராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் நவகிரங்களுக்கு அர்ச்சனை செய்யலாம்.
பவுர்ணமி அன்று அம்மன் சந்நதியில் வழிபடலாம்,
வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி வர நற்பலன்கள் கிடைக்கும்.
கடக இராசிக்காரர்கள் ஞாயிறு அன்று இராகு காலத்தில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம்.
சனிக்கிழமைகளில் ராமபிரானை வழிபாடு செய்தால் சிறப்பு.
வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வர பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
சிம்ம இராசிக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகனுக்கு தீபம் ஏற்றலாம்.
சனிக்கிழமைகளில் துளசி அர்ச்சனை செய்யலாம் மற்றும் சூரிய வழிபாடு செய்தல் நலம்.
கன்னி இராசிக்காரர்கள் வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யலாம்.
பிரதோஷத்தன்று நந்தியை வணங்கி நற்பலன்களை பெறலாம்.
வெள்ளியன்று ராகு காலத்தில் துர்கை வழிபாடு சிறந்தது.
துலாம் இராசிக்காரர்கள் நவகிரங்களில் ஒன்றான ராகு கேதுக்கு அர்ச்சனை செய்தல் நலம்.
சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மர் வழிபாடு செய்தல் நலம்.
வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு செய்யலாம்.
விருச்சிக இராசிக்காரர்கள் சனிக்கிழமையன்று அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றலாம்.
பவுர்ணமி அன்று சிவன் கோவில்களில் கிரிவலம் வரலாம்.
செவ்வாய்கிழமைகளில் முருகன் வழிபாடு செய்தால் சிறப்புடன் வாழலாம்.
தனுர் இராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று நாக வழிபாடு செய்யலாம்.
சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்யலாம்.
பிரதோஷத்தன்று சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வர வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
மகர இராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்யலாம்.
தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு தீபம் ஏற்றி வர சங்கடங்கள் அகலும்.
கும்ப இராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமையில் கேதுவுக்கு அர்ச்சனை செய்யலாம்.
ஞாயிறு அன்று இராகு காலத்தில் காளி வழிபாடு செய்தல் சிறப்பு.
வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வர நற்பலன்கள் அதிகரிக்கும்.
மீன இராசிக்காரர்கள் சனிக்கிழமை பெருமாளுக்கு அர்ச்சனை செய்தல் சிறப்பு.
வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனை வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் கிடைக்கும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment