Tuesday 15 August 2017

ஸ்ரீ சரபேஸ்வரர் துதி

ஸ்ரீ சரபேஸ்வரர் துதி
ஓம் ஸாலுவேசாய வித்மஹே
பட்ஷி ராஜாய தீமஹே
தந்நோ சரபேஸ்வர ப்ரசோதயாத்
அஸ்ட பாதாய வித்மஹே
பட்ஷி ராஜாய தீமஹே
தந்நோ சரபப் ப்ரசோதயாத்
-----------------------
சரபேஸ்வரர் என்பவர் யார்?
சரபேஸ்வரரை வழிப்பட்டல் கிடைக்கும் பலன்கள்...
சரபேஸ்வரர் 108 போற்றிகள்...
ஓம் விண்ணவா போற்றி
ஓம் விளங்கு உயர் வீரா போற்றி
ஓம் திண்ணவா போற்றி
ஓம் அணிமாமலர் பறவை போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் ருத்ர அக்னியே போற்றி
ஓம் மந்திரத் துதி தேவா போற்றி
ஓம் மாமலர் நாகலிங்க சக்தியே போற்றி
ஓம் சர்வ வியாபியே போற்றி
ஓம் சங்கரா போற்றி
ஓம் காலகாலனை நடுங்கச் செய்தவனே போற்றி
ஓம் காலமெல்லாம் கருத்தில் நிறைந்தவனே போற்றி
ஓம் பிறவி பயம் அறுத்தவனே போற்றி
ஓம் நிரந்தரமானவனே போற்றி
ஓம் நியாயத் தீர்ப்புவழங்குபவனே போற்றி
ஓம் வீரபத்திரனே போற்றி
ஓம் ஆயிரம் நாமம் உடையாய் போற்றி
ஓம் மகாதேவா போற்றி
ஓம் நரசிம்மரை அடக்கிய அழகா போற்றி
ஓம் நான்மறை ஆனாய் போற்றி
ஓம் சூலினி உடனுறை தேவா போற்றி
ஓம் அதர்வண காளியை அடைந்தவா போற்றி
ஓம் மந்திர தந்திரங்களை ஆள்பவனே போற்றி
ஓம் கம்பத்தில் சிகண்டி சித்தரால் நிற்பவனே போற்றி
ஓம் கோபக் கனலாய் விடுபவனே போற்றி
ஓம் கூரிய நகங்களைக் கொண்டவனே போற்றி
ஓம் லிங்க பதியே போற்றி
ஓம் இருபத்தியோரு முக ருத்திராட்சம் அணிந்தவனே போற்றி
ஓம் சத்திய துணையே போற்றி
ஓம் சாந்தி அருள்பவனே போற்றி
ஓம் சத்திய சாட்சியே போற்றி
ஓம் சத்திய உருவே போற்றி
ஓம் ஆக்கல், காத்தல், அழித்தல் தலைவா போற்றி
ஓம் புவனம் பல்லாயிரம் கோடியும் படைத்தாய் போற்றி
ஓம் அனைத்தையும் ஆட்டிப் படைப்பாய் போற்றி
ஓம் அறம் பொருள் இன்பம் அளிப்பாய் போற்றி
ஓம் அம்ருத அரசே போற்றி
ஓம் சித்தர்கள் சிந்தையில் புகுந்தவனே போற்றி
ஓம் ருத்திர மூர்த்தியே போற்றி
ஓம் காலகாலமாய் இருப்பவனே போற்றி
ஓம் சிந்தாமணியின் ஜீவ சிவனே போற்றி
ஓம் சித்தாந்த பக்திசித்தனே போற்றி
ஓம் பரமாத்மனே போற்றி
ஓம் பரப்பிரம்மனே போற்றி
ஓம் பரப்பிரம்ம ஜோதியே போற்றி
ஓம் கைலாசவாசா போற்றி
ஓம் திருபுவனேசா போற்றி
ஓம் நடுக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் நம்பினோர்க்கு நலம் அருள்வாய் போற்றி
ஓம் ஏவல் தீர்ப்பாய் போற்றி
ஓம் பில்லி சூன்யம் அழிப்பாய் போற்றி
ஓம் எதிரிகள் கொடுமை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்ணியவாறு எமக்கருள்வாய் போற்றி
ஓம் திண்ணிய நெஞ்சம் தருவாய் போற்றி
ஓம் திடமாய் காரியம் செய்ய வைப்பாய் போற்றி
ஓம் தீயவர் தொல்லை தீர்ப்பாய் போற்றி
ஓம் திருவருள் தருவாய் சரபேஸ்வரா போற்றி
ஓம் வழித்துணையாய் வருவாய் போற்றி
ஓம் வலம் சுழித்து எட்டு திசையும் காப்பாய் போற்றி
ஓம் நஞ்சை புஞ்சை நலமுடன் காப்பாய் போற்றி
ஓம் நம்பி வருவோர்க்கு அருள்வாய் போற்றி
ஓம் நமசிவாய திருவே போற்றி
ஓம் சிவ சூரியா போற்றி
ஓம் சிவச் சுடரே போற்றி
ஓம் அட்சர காரணனே போற்றி
ஓம் ஆதி சிவனே போற்றி
ஓம் கால பைரவரே போற்றி
ஓம் திகம்பரா போற்றி
ஓம் ஆனந்தா போற்றி
ஓம் கால காலனே போற்றி
ஓம் காற்றெனக் கடுகி உதவும் தேவா போற்றி
ஓம் கர்ப்பப் பையைக் காப்பவனே போற்றி
ஓம் காத்து கருப்புகளை அழிப்பவனே போற்றி
ஓம் ஓம் எரி ஓம்பலின் அவிசை ஏற்பவனே போற்றி
ஓம் கல்லாலின் கீழ் அமர்ந்த தேவா போற்றி
ஓம் வல்லார்கள் நால்வரும் தோத்தரித்த தேவா போற்றி
ஓம் எல்லாமாய் அல்லதுமாய் இருந்த சரபா போற்றி
ஓம் முக்திக்கு வித்தாகும் மூல குருவே போற்றி
ஓம் தெவிட்டாத சின்மயச் சுடரே போற்றி
ஓம் விரும்பி நல்விளக்கு தீபத்தில் வருபவனே போற்றி
ஓம் அமரர் படையுடைத் தலைவா போற்றி
ஓம் நீலக் கையில் மான் தூக்கி நின்றோனே போற்றி
ஓம் சிவந்த மழுவும் தூக்கிச் சிறந்தோனே போற்றி
ஓம் எங்கிருந்து அழைத்தாலும் வருவோனே போற்றி
ஓம் சூலினித் தாயின் சுகத்தோனே போற்றி
ஓம் ப்ரத்யங்கிரா தேவியின் பரப்ரும்மமே போற்றி
ஓம் செம்பொன் அம்பலத்திலே ஆடும் அரசே போற்றி
ஓம் நகமே ஆயுதமாய்க் கொண்ட நமசிவாயமே போற்றி
ஓம் பெருமாளுக்கும் நான்முகனுக்கும் நலம் தரும் தெய்வமே போற்றி
ஓம் <உள்ளுவார் உள்ளத்தில் <உறைவாய் போற்றி
ஓம் சிந்தனைக்கினிய செல்வனே போற்றி
ஓம் திருவுக்கும் திருவான சிவனே போற்றி
ஓம் யாவையும் யாவரும் ஆனாய் போற்றி
ஓம் வேதமெல்லாம் தொழும் தெய்வமே போற்றி
ஓம் வாழி வாழி சாலுவேசா வாழி போற்றி
ஓம் நோய்கள் தீர்க்கும் நெடியாய் போற்றி
ஓம் மூலவர்க்கெல்லாம் மூலவா போற்றி
ஓம் பிரத்தியங்கிரா ப்ராணநாதா போற்றி
ஓம் சூலினியின் சூட்சம தேவா போற்றி
ஓம் கவஷ ஜ<லூஷா குருதேவா போற்றி
ஓம் இதூஷா மாதா புத்ர சேவித தேவா போற்றி
ஓம் மூவர்க்கும் முந்திய முதல்வா போற்றி
ஓம் முக்தர்கள் ஜீவ ஒளியே போற்றி
ஓம் முழுவதுமாய் எம்மைக் காப்பாய் போற்றி
ஓம் அடியார்க்கு அருளும் அடியாராய் இருக்கும் ஈசனே போற்றி
ஓம் அங்கமெல்லாம் அருட்ஜோதி அருள் கூட்டும் சுயஞ்ஜோதியே போற்றி
ஓம் வெள்ளிக்கு மரணமிலா வழி தந்த விடிவு ஜோதியே (வெள்ளி= சுக்கிரன்) போற்றி
ஓம் குருவுக்கு உரு தந்த உயர் ஜோதியே போற்றி
ஓம் பூரண சரபேசா போற்றி! போற்றி !! போற்றி !!!
சரபேஸ்வரர் 108 போற்றிகள் சம்பூர்ணம்
--------_-------------------------------------------
ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும்.
ஸ்ரீ சரபேஸ்வரர்
வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும்.
இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, " தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது " என்ற அரிய வரத்தினை பெற்றான்.
தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக தொழக்கூடாதெனக் கூறி கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு பரந்தாமன் பக்தனாய் பிறந்தான்.
எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனை கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி "எங்கெ உன் நாராயணன்'' எனக் கேட்க, பிரகலாதணோ " என் நாராயணன் தூணிலும் இருப்பார்.
துரும்பிலும் இருப்பார் " என்று கூறினான். கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன். இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தி, எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.
அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.
இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.
இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்'' என்றும் "சாலுவேஸ்வரன்'' என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.
இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ஸ்ரீ ப்ரத்யங்கிரா, மற்றும் ஸ்ரீ சூலினி. இதில் ஸ்ரீ தேவி பிரத்யங்கிராசரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.
காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.
லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் "கலியுக வரதன்'' என்றும் குறிப்பிடுகிறார்கள்.
"நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி'' என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபேஸ்வரரின் சிற்பங்கள் காணப்படுகிறது.
இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலில் நாம் பார்த்ததும் தனிச் சன்னதி தான். ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது*
உண்மையான பாதுகாப்பு கவசம்
1. நம்மில் சிலபேருக்கு வீட்டில் இருக்கும் போதோ அல்லது வெளியில் செல்லும் பொழுதோ இனம் புரியாத அச்சம் ஏற்படும் அந்த நேரத்திலும்.
2.சிலருக்கு பல காரணங்களினால் திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கும் அவர்களும்
3.சிலருக்கு தீய கனவுகளின் காரணமாக இரவில் பெருங்குரலை எழுப்பி அலறுவார்கள் அவர்களும்
4.சில குடும்பங்களில் கணவரின் தீய நடத்தையால் குடும்பமே நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருக்கும் அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் .
5.பெண்கள் வேலை,படிப்பு காரணமாக அடிக்கடி வெளியில் செல்லும் போது தீயவர் தொல்லைக்கு ஆளாக கூடியவர்களும்.
6.வயதுக்கு வந்த பெண்ணை படிப்பதற்கு கல்லூரிக்கு(ஹாஸ்டல் ) அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழும் தகப்பனாரும்
7.சில மாணவர்கள் தைரியம் குறைந்தவர்களாக இருப்பார்கள் அவர்களும்
ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை
தினமும் சொல்லி வரவும் ( தக்க நிவாரணம் கிடைக்கும் .
" உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே! "
இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை
நீங்கள் உணரலாம் .பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம்.
அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.
பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை உண்மையா, பொய்யா? அவை எப்படிச் செயல்படுகின்றன?‘ என்று ஆராய்ச்சி செய்வதை விட அத்தகைய கொடுமையான விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். சரபேஸ்வரர் வழிபாடு எல்லாவிதமான பில்லி, சூன்யத் துன்பங்களையும் தீர்க்கும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment